வாரிசு குழுவிற்கு நோட்டீஸ்






சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் வாரிசு படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இதில் அனுமதியின்றி யானைகளை நடிக்க வைப்பதாக தகவல் வெளியானது. இதனை செய்தி சேகரிக்க சென்ற தனியார் ஊடக ஊழியர்கள் மீது படப்பிடிப்பு ஊழியர்கள் தாக்குதல் நடத்தியதாக எழுந்த புகாரில் 3 பேரை நசரத் பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர். அதேசமயம் அனுமதியின்றி யானைகள் பயன்படுத்தியதாக எழுந்த புகாரும் உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 


இந்நிலையில் அரசின் முன் அனுமதியை பெறாமல் யானைகளை பயன்படுத்திய புகாரில் விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் புகாருக்கு 7 நாட்களுக்குள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 


குழந்தையின் பெயரை அறிவித்த அலியா பட்







நவம்பர் 6ஆம் தேதி காலை அலியா பட்டிற்கு, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ராஹா என குழந்தைக்கு பெயர் வைத்திருப்பதை, அனைவருக்கும் தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதை அவரது ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.


வெளியானது அலைகடல் பாடலில் வீடியோ வெர்ஷன்



முதல் பாகத்தில் இடம்பெற்றுள்ள அலை கடல் எனும் பாடலின் வீடியோ நாளை கலை  11 மணிக்கு வெளியாகும் என  லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஐஸ்வர்யா லட்சுமி நடித்த பூங்குழலி கதாபாத்திரம் அறிமுகமாகும் பாடல் இதுவென்பதால், லைகா நிறுவனத்தின் அறிவிப்பு ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இடம்பெற்ற தேவராளன் ஆட்டம் பாடலின் வீடியோ வெளியிடப்பட்டது. தற்போது லைகா அலைகடல் பாடலை வெளியிட்டுள்ளது.


தொடங்கியது சில்லா சில்லா ஷூட்டிங்






துணிவு படத்திற்காக சென்னையில் கோகுலம் ஸ்டுடியோஸில் பிரமாண்டமான செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த செட்டில் சில்லா சில்லா பாடல் படப்பிடிப்பு நடைபெற்றது என கூறப்படுகிறது. அஜித் குமார் இடம்பெறும் இந்த பாடலின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. இன்றைக்குள் பாடலின் படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இயக்குனர் விக்னேஷ் சிவன் சில்லா சில்லா பாடல் செட்டிற்கு சென்று பார்வையிட்டதாக கூறப்படுகிறது. அஜித் குமார் துணிவு படத்தின் டப்பிங் பணிகளை முழுவதுமாக முடித்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 


ராஷ்மிகாவிற்கு தடை?






தனது கிரிக் பார்ட்டி படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்திருந்த ரக்‌ஷித் ரெட்டியுடன் காதல் ஏற்பட்டு நிச்சயதார்த்தம் வரை நடந்த நிலையில் ராஷ்மிகாவின் படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றதால் அவர் திருமண முடிவில் இருந்து விலகினார். இந்நிலையில் சமீபத்தில் ராஷ்மிகா பங்கேற்ற நேர்காணல் ஒன்றில், அவர் தனது முதல் படமான கிரிக் பார்ட்டி பற்றி பேசிய நிலையில், அந்த படத்தை தயாரித்த ரக்‌ஷித் ஷெட்டியின் நிறுவனத்தின் பெயரை சொல்லாமல் இருந்தார். 


ராஷ்மிகாவின் இந்த அணுகுமுறையால் ரசிகர்கள் கோபமடைந்தனர். மேலும் அவர் ஹிந்தி, தமிழ் என தன்னை வளர்த்து விட்ட கன்னட திரையுலகை விட்டு வேறு மொழியில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் கன்னட திரையுலகம் ராஷ்மிகாவுக்கு நிரந்தர தடை போடலாம் என கூறப்படுகிறது. அடுத்ததாக ராஷ்மிகா நடிப்பில் வெளியாகவுள்ள வாரிசு மற்றும் புஷ்பா படங்களில் இருந்து இந்த நடவடிக்கை இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ராஷ்மிகாவின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பான ட்வீட் ஒன்றும் இணையத்தில் வைரலாகியுள்ளது.