நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 


தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆனால் விஜய் ரசிகர்களுக்கு இன்று தான் பொங்கல் திருவிழாவாகும். காரணம் 2 ஆண்டுகளுக்குப் பின் விஜய்க்கு பொங்கல் வெளியீடாக ‘வாரிசு’ படம் வெளியாகியுள்ளது. இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கியுள்ள இப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் சரத்குமார், ஷாம், பிரபு, சங்கீதா, ஜெயசுதா, சம்யுக்தா, பிரகாஷ்ராஜ், யோகிபாபு, கணேஷ் வெங்கட்ராமன், ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 


முன்னதாக படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை சென்னை, கோவை, ஆற்காடு, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட்  நிறுவனமும், மற்ற இடங்களில் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனமும் கைப்பற்றியுள்ளது. கடந்த ஜனவரி 4 ஆம் தேதி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 


இதனிடையே வாரிசு படத்தின் ட்ரெய்லர் அம்மா - மகன் சென்டிமென்ட் காட்சிகளை கொண்டதாக இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், படத்தில் அப்பா - மகன் உறவு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக படம் பார்த்த பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். முதல் காட்சி காலை 4 மணிக்கு தொடங்கிய நிலையில் படம் பார்த்த பலரும் தங்கள் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றை காணலாம்.