தமிழ் சினிமாவின் முன்னணி மாஸ் ஹீரோக்களான நடிகர் அஜித் மற்றும் நடிகர் விஜய் இருவரின் திரைப்படங்களும் வரும் பொங்கலுக்கு கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் ரிலீசாகிறது. இந்த செய்தி தான் தற்போது தென்னிந்திய சினிமாவின் ட்ரெண்டிங் நியூஸாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த இரண்டு படத்திற்கும் சம்பந்தப்பட்ட ஒருவர் கொடுத்த அப்டேட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


 




ட்ரெண்டிங் நொ.1 வாரிசு :


ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரின் சார்பில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிப்பில் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் இளைய தளபதி விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, யோகிபாபு, குஷ்பு, ஷ்யாம், சங்கீதா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


தமன் இசையமைப்பில் சமீபத்தில் வெளியான 'ரஞ்சிதமே ரஞ்சிதமே...' பாடல் பட்டையை கிளப்பி பட்டி தொட்டி யெங்கும் தெறிக்கவிட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள 'தீ தளபதி' பாடலும் ட்ரெண்டிங் லிஸ்டில் நம்பர் .1 இடத்தை பிடித்துள்ளது. இந்த நிலையில் இந்தப்படத்தில் நடித்துள்ள ஷ்யாம் கொடுத்துள்ள பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


 


 






 


ஷ்யாம் கொடுத்த அதிர்ச்சி :


நடிகர் ஷ்யாம் இது குறித்து கூறுகையில் " 'வாரிசு' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி அட்வான்ஸ் பெற்ற ஒரே வாரத்தில், துணிவு படத்தின் இயக்குனர் ஹெச். வினோத்திடம் இருந்து வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அழைப்பு வந்தது. மிகுந்த சந்தோஷத்தில் இருந்த எனக்கு ஒரு அதிர்ச்சியும் காத்திருந்தது.


ஏற்கனவே தளபதி 66 திரைப்படமான 'வாரிசு' படத்தில் ஒப்பந்தமாகி விட்டேன் என்பதால் அஜித் சார் படத்தின் டேட்ஸ் பற்றி கேட்டேன். சொல்லி வைத்தது போல, இரண்டு படத்தின் தேதிகளும் ஒரே நாட்களில் இருந்தது.  வாரிசு படத்திற்காக நான் குறைந்தது ஆறு மாதத்திற்கு அதே லுக்கில் இருக்க வேண்டிய கட்டாயம். ஏற்கனவே நான் வாரிசு படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டேன். அதனால் என்னால் துணிவு படத்தின் வாய்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது. அஜித் சார் உடன் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்ததால் மிகுந்த மனவருத்தம் அடைந்தேன். இருப்பினும் ஹெச். வினோத் பரவாயில்லை. அடுத்த முறை இணையலாம்”  என்று அவர் கூறினார்