மீண்டும் தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகர் வடிவேலு. நாய் சேகர், மாரி செல்வராஜ் படத்தில் அவர் நடித்து வருகிறார். தற்போது அவர் ‘மனதை திருடிவிட்டாய்’ திரைப்படத்தில் இடம்பெற்ற காமெடி பாடலான  SING IN THE RAIN பாடலை பாடியுள்ளார். சமீபத்தில் பிரபுதேவாவை சந்தித்துள்ளார். அப்போது தான் இந்தப்பாடலை வடிவேலு பாடினார். பிரபுதேவாவை கட்டிப்பிடித்து 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் பாடலை பாடியபோது இருவரின் முகத்திலும் மகிழ்ச்சி நிரம்பியிருந்தது. வடிவேலு அப்போது பாடிய அதே டோன், பாடிலாங்குவேஜ்ல் அப்படியே பாடியது, அவர் ஒரு லெஜெண்ட் என நிரூபித்துள்ளார்.


இந்த வீடியோவை டான்ஸரும், நடிகருமான பிரபுதேவா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  நட்பு என்ற கேப்ஷனோடு வெளியிடப்பட்ட அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மீண்டும் இருவரையும் இப்படி பார்த்ததில் மகிழ்ச்சியாக இருப்பதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.


வீடியோ


 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண