உர்ஃபி ஜாவேத் இந்திய தொலைக்காட்சி நடிகை மற்றும் சமூக ஊடக மாடல் ஆவார். பிரபல ஹிந்தி சீரியல்களில் நடித்து வந்த இவர், 2021 ஆம் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். பொது வெளியில் ஆடைகளை மிகவும் கவர்ச்சியாக அணிந்து வருவதன் மூலம் பிரபலமான இவரை இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் பாலோவர்களுக்கு மேல் உள்ளனர். 






முன்னதாக, அவரது உடை குறித்து எழுந்த விமர்சனங்கள் குறித்து அவர் பேசுகையில், நான் அணியும் உடையை வைத்து என்னை நீங்கள் 'எடை போட்டால்', அவை உங்களை என்னை கற்பழிக்க தூண்டினால் குற்றம் என்மீது இல்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.






இந்நிலையில் தற்போது அவர் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. பொது இடங்களிலும் சமூக ஊடகங்களிலும் ‘சட்டவிரோத மற்றும் ஆபாசமான செயல்களை’ செய்ததாக உர்ஃபி ஜாவேத் மீது வெள்ளிக்கிழமை புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு குறித்து நடிகை உர்ஃபி ஜாவேத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசியுள்ளார்.




அதில் அவர், என் மீது இன்னும் எத்தனை போலீஸ் புகார்கள் என்று தெரியவில்லை! ஆஹா. என்னைப் பலாத்காரம் செய்து கொல்லப் போவதாக வெளிப்படையாக மிரட்டும் நபர்களுக்கு எதிராக மக்கள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. என் உடைகள் தான் உங்களுக்கு பிரச்சினையாக தெரிகிறதே தவிர பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யும் ஆண்கள் அல்ல" என்று குறிப்பிட்டுள்ளார்.




மேலும் ஆரஞ்சு நிற உடையில் அவர் நடந்து வரும் வீடியோ ஒன்றை பகிர்ந்து, நான் ஓட்டலில் இருந்த பொழுது எடுக்கப்பட்டது. இதில் நான் நன்றாக இருக்கிறேன். தயவு செய்து இதை ஆதாரமாக எடுத்து கொள்ளுங்கள். இது என்னுடைய சிறிய கோரிக்கை என்று பதிவிட்டுள்ளார்.