கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.   மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்துக்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.


ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் 30ஆம் தேதி உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், முன்னதாக படத்தின் ஓடிடி உரிமையை 125 கோடி ரூபாய்க்கு அமேசான் நிறுவனம் பெற்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பொன்னியின் செல்வனில் நடித்துள்ள நடிகர்கள் அவ்வப்போது கதாபாத்திரமாகவே மாறி ட்வீட் செய்து வருகின்றனர். 






 இன்று ட்வீட் செய்த விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷாவை டேக் செய்து சோழனாகவே மாறி ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில், ''சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டு திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா?குந்தவை, உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான்.என்ன நண்பா,வருவாய் தானே?அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா'' எனக் குறிப்பிட்டிருந்தார். அந்த வகையில் விரைவில் படக்குழுவினர் தஞ்சை பெரியகோவிலுக்கு விசிட் அடிக்குமென தெரிகிறது.






இந்நிலையில் விக்ரம் தன்னுடைய ட்விட்டர் பெயரை ஆதித்ய கரிகாலன் என மாற்றியுள்ளார். த்ரிஷாவும் கதாபாத்திரத்தின் பெயரையே ட்விட்டரின் பெயராக மாற்றிவிட்டார். பொன்னியின் செல்வனில் த்ரிஷா  ஏற்று நடித்திருக்கும் குந்தவை என்ற பெயரையே தன்னுடைய ட்விட்டர் பெயராக மாற்றியுள்ளார் த்ரிஷா. படம் நெருங்க நெருங்க படத்தின் நடிகர்கள் போட்டிபோட்டுக்கொண்டு பட ப்ரமோஷனில் இருக்கின்றனர். அந்த வகையில் நடிகர்கள் புது ரூட்டை பிடித்துள்ளதாக ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.