டோலிவுட்டில் பிரபலமான நடிகர் அல்லு அர்ஜுன். பல வெற்றிப் படங்களைத் தயாரித்து கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ளார். குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய அவர், தனது திரைப்படம் ஒன்றில் நடனக் கலைஞராகவும் நடித்துள்ளார். அவர் ஒரு அற்புதமான நடனக் கலைஞர். அலா வைகுந்தபுரமுலூ (2020), மற்றும் புஷ்பா: தி ரைஸ் (2021) போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிகளுக்காக அவர் கொண்டாடப்படுகிறார். இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த அல்லு அர்ஜுன் தன்னைப்பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்திருந்தார். இதோ அவரது பேட்டி...




”நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். நான் சுற்றி திரிந்தது எல்லாம் தி. நகர் மற்றும் பாண்டிபசாரில் தான். என் வாழ்க்கையின் முதல் 18 வருடங்கள் இங்குதான் கழித்தேன்.


சில நேரங்களில் ஒரு குழந்தையைப் பார்க்கும்போது, ​​​​அவர்கள் ப்ராஜிடி என்பதை நீங்கள் அடையாளம் காணலாம். அவர்கள் தங்கள் சொந்த திறமையால் என்னவாக இருந்தாலும் பிரகாசிக்க முடியும், ஆனால் நான் அதுபோல் இல்லை.


கல்வியில் நான் கடைசியாக இருந்தேன். எல்லோரும் என்னைப் பற்றி கவலைப்பட்டனர். அப்போது நான் இந்த உயரத்தை எட்டுவேன் என்று நினைக்கவில்லை. ஆனால் நான் எப்போதும் என் பணிகளைச் சரியாகச் செய்வதில் உறுதியாக இருந்தேன், அதுவே எனக்கு இங்கு வர உதவியது.




தெலுங்கு திரைப்படங்கள் எப்போதும் கமர்ஷியல் விஷயங்களுடன் எஃபெக்ட் கொண்டிருக்கும், அதேசமயம் தமிழ் படங்கள் குறிப்பாக பருத்திவீரனுக்குப் பிறகு ரஸ்டிக் எஃபெக்ட் கொண்டிருந்தது. அந்த படம் ஒரு ட்ரெண்ட் சேஞ்சர், இந்த  எஃபெக்டுடன் கமர்ஷியல் படம் செய்ய வேண்டும் என்று நான் எப்போதும் விரும்பினேன். அலா வைகுந்தபுரமுலூ-க்கு பிறகு, புஷ்பா எனக்கு தேவையான சரியான களமாக அமைந்தது


பெரும்பாலான நேரங்களில் கமர்ஷியல் படம் அல்லது பெர்ஃபார்மென்ஸ் படமாகத்தான் இருக்கும். புஷ்பாவில் அதிர்ஷ்டவசமாக இது பெர்ஃபார்மென்ஸ் ஹெவியான கமர்ஷியல் படம். அந்த கேரக்டரில் நடிப்பதை நான் மிகவும் அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.


சந்தனமரக்கட்டை பின்னணியில் புஷ்பாவைப் பற்றிய படம்.  ஒரு சிறிய மரக்கடத்தல்காரன் எப்படி சக்தி வாய்ந்த மனிதனாக மாறுகிறான் என்பது பற்றிய கதை.ஹீரோவை யாரும் தொட முடியாத இடத்தில் இருப்பார், எனவே அவரை வீழ்த்துவதற்கு ஒரு சக்திவாய்ந்த வில்லன் தேவைப்பட்டார். ஃபஹத் ஃபாசில் மலையாள திரையுலகில் ஒரு நட்சத்திரம் மற்றும் அனைவராலும் விரும்பப்படுபவர். அவர் மிகவும் அற்புதமான நடிகர். அவருடன் படம் பண்ணா நன்றாக இருக்கும் என்று எனக்கு ஒரு உணர்வு இருந்தது. அதிர்ஷ்டவசமாக அவருக்கும் அந்த பாத்திரம் பிடித்திருந்தது, சுகுமார் மீது அவருக்கு மிகுந்த மரியாதை இருந்தது. முழுக்கதையும் அவருக்குப் பிடித்திருந்தது. நான் அவர் நடிப்பை மிகவும் ரசித்தேன். செட்டில் யாராவது நன்றாக நடித்தால் அது என்னை ஊக்கவிக்கும்.




நாங்கள் ஆரம்பித்தபோது ஒரு பகுதி என்று நினைத்துதான்ஆரம்பித்தோம், ஆனால் படப்பிடிப்பின்போது, ​​​ உள்ளடக்கம் அதிகமாக உள்ளது என்றும் ஒரு படத்தில் செய்ய முடியாது என்றும் நாங்கள் உணர்ந்தோம்.


Also Read | AIADMK Issue: எம்.பி ரவீந்தரநாத் உள்ளிட்ட 18 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்: இபிஎஸ் அதிரடி


மொழிபெயர்ப்பின் தரம் தமிழில் சிறப்பாக செய்யப்பட்டு இருந்ததற்கு மதன் கார்க்கிக்கு நன்றி.அவர்கள் தெலுங்கின் எசன்ஸ் இழக்காமல் மொழிபெயர்க்க வேண்டியிருந்தது. அதை அவர் சிறப்பாக செய்திருந்தார்.”


இவ்வாறு அந்த பேட்டியில் நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்திருந்தார்.