விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரபாகிவரும், பாரதி கண்ணம்மா சீரியலுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இன்று இந்த சீரியலில்
  என்னனெல்லாம், நடக்கிறது என்பதைப் பார்ப்போம்.


மருத்துவமனையிலிருந்து, பாரதி அப்பா வீட்டிற்கு அழைத்துவரும் கண்ணம்மாவை அனைவரும் உள்ளே அழைக்கின்றனர். ஆனால் தனக்கு தன்மானம் இருக்கிறது என கூறி கண்ணம்மா உள்ளே வர மறுப்பு தெரிவிப்பதுடன் சீரியல் முடிகிறது. 

 

இன்றைய எபிசோட் என்ன என்பதைப் பார்ப்போம்......

 

பாரதியை நேரில் சந்திக்கும் கண்ணம்மா

 

கண்ணம்மா தனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளது என்பதை  உறுதியாக நம்புகிறாள். இதுகுறித்து தனது கணவர் பாரதியிடம் கேட்க முடிவெடுக்கிறாள். இருப்பினும் இதுகுறித்து பாரதி அசிங்கப்படுவானே? என கண்ணம்மா  யோசிக்கிறாள். ஆனால் குழந்தை தான் முக்கியம் என பாரதிக்குத் தொலைப்பேசியிலிருந்து அழைத்து, நேரில் பார்க்க வேண்டும் என அழைக்கிறாள். இதனை விரும்பாத பாரதி வரமுடியாது என மறுப்பு தெரிவிக்கிறார். முக்கியமான விஷயம் குறித்து பேசவேண்டும் அதனால், கண்டிப்பா வாங்க என கண்ணம்மா கூப்பிட, அரைமனசாக சம்மதம் தெரிவிக்கிறார். 

 

கண்ணம்மாவை நினைத்து வருந்தும் குடும்பம்

 

வீட்டிற்குள் வராத கண்ணம்மாவை நினைத்து, வேணு வருத்தப்படுகிறார். அப்போது அவரது மகன்,  அகில் கண்ணம்மா பக்கம் நியாயம் உள்ளது எனக்  கூறுகிறான். அனைவரும் வேணுவைப் பார்த்தபடி அமர்ந்து இருக்கின்றனர். 

 

ஒட்டு கேட்கும் வெண்பா

 

வீட்டில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக வந்த வெண்பா, மறைந்திருந்து ஒட்டு கேட்கிறார். அப்போது அகில் பேசியதைக் கேட்டுவிட்டு, இதற்காகத் தான் நான் அஞ்சலிக்கு தவறான மாத்திரைகள் கொடுத்து இருக்கிறேன் என மனதிற்குள் நினைக்கிறாள். 

 

வெண்பா மறைந்து நிற்பதை சௌந்தர்யா பார்த்து விடுகிறாள். உடனே அவரை அதட்டிக் கூப்பிட்டு, ஒட்டு கேட்டுகிட்டு இருந்தியா?  என சௌந்தர்யா  கேட்டார். அதற்கு நான் உங்களை தொந்தரவு பண்ண வேணாம்னு நினைச்சேன் என வெண்பா கூற சௌந்தர்யா, எதுக்காக வந்த என கோபமாக கேட்டார். உடனே அவர் அங்கிளுக்கு உடம்பு சரியில்ல’னு கேள்விப்பட்டேன் அதனால் பார்த்துவிட்டுச் செல்ல வந்தேன் என்றார். 

 

கண்ணம்மா எங்க?

 

இதனையடுத்து  கண்ணம்மா எங்கே என கேட்க, அவ உன்ன மாதிரி மானங்கெட்டவ இல்ல, கிளம்பி விட்டார் என சௌந்தர்யா கூறினார். உடனே சௌந்தர்யா, நாங்க பாரதியையும்- கண்ணம்மாவையும் எப்படி சேர்த்து வைப்பது என யோசித்து, பேசிக்கொண்டு இருந்தோம். இதனால் கடுப்பான வெண்பா அந்த இடத்தைவிட்டு விலகிச் செல்கிறாள். 

 

கடற்கரையில் அழகிய சந்திப்பு

 

பாரதியும்- கண்ணம்மாவும் கடற்கரையில் சந்திக்கின்றனர். அப்போது பழைய விஷயங்கள் அனைத்தையும் இருவரும் நினைத்துப் பார்க்கின்றனர். நான் இப்போது டாக்டர் பாரதியிடம் பேசவில்லை, என் பாரதி மாமாவிடம் பேச விரும்புகிறேன் என்றார் கண்ணம்மா. 

 

அப்போது பாரதியுடன் தான் பழகியபோது நடத்த விஷயங்கள் குறித்து கண்ணம்மா புகழ்ந்து பேச, அதற்கு பாரதி, நானும் என் பழைய கண்ணம்மா கிட்ட தான் பேச விரும்புகிறேன். அவள் யாருக்கும் கேட்டது நினைக்காத நபர் எனக் கூறுகிறார். 

 

அப்போது பாரதி, தன் கண்ணம்மாவை எப்போது முதல் முதலில் பார்த்தேன் என்று விவரிக்கிறார். கண்ணம்மா என்னிடம், எந்த மாற்றமும் இல்லை.  நான் பழைய கண்ணம்மா தான் என்று சொல்கிறாள். 

 

குழந்தையை காணோம்

 

பாரதியிடம், கண்ணம்மா ஒரு உதவி வேண்டும் என கேட்க, அதை செய்ற நிலையில் நான் இல்லை என அவர் மறுத்துவிட்டார். இருப்பினும் கண்ணம்மா அவரை விடாமல், நம்ம குழந்தையை காணோம், யாரோ கடத்தி வைத்து மிரட்டுவதாகச் சொல்கிறாள். இதனால் பாரதி என்ன சொல்வது என தெரியாமல் அதிர்ச்சியில் இருப்பதோடு, இன்றைய எபிசோட்