தி கோட் 


தி கோட் படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. பல்வேறு நடிகர்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். ஆனால் நிச்சயமாக தந்தை மகன் என இரு கதாபாத்திரங்களில் விஜய் தான் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார். இப்படத்தை பார்த்த விஜய் வெங்கட் பிரபுவிடம் தான் அவசரப்பட்டு சினிமாவில் ரிடையர்மெண்ட் அறிவித்துவிட்டேன் இல்லை என்றால் உன்னுடன் இன்னொரு படம் பண்ணியிருக்கலாம் என்று சொன்னதாக வெங்கட் பிரபு தெரிவித்தார். படத்தைப் பார்த்த விஜய் இயக்குநர் வெங்கட் பிரபுவை அப்படியே கட்டிப்பிடித்திருக்கிறார். இதேபோல் தான் மங்காத்தா படம் பார்த்த அஜித்தும் அவரை கட்டிபிடித்தார். இந்த இருவரும் கட்டிபிடித்து தன்னை பாராட்டிய தருணத்தைக் குறித்து ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார். 


அஜித் விஜய் பற்றி வெங்கட் பிரபு


" அஜித் சாரால் தன்னுடைய எமோஷனை கட்டுப்படுத்த முடியாது. அவர் சந்தோஷமாகிவிட்டார் என்றால் அது அவரது முகத்தில் தெரியும். ஆனால் விஜய் சார் அப்படி இல்லை. அவர் தன் எமோஷனை வெளிக்காட்டாமல் அதை கட்டுப்படுத்தக் கூடியவர். எல்லா விஷயங்களுக்கும் நிதானமாக ரொம்ப மெச்சூராக நடந்துகொள்வார். ஆனால் அஜித் சாருக்கும் தன்னுடைய எமோஷனை மறைக்கத் தெரியாது. அவர் சந்தோஷமாகி விட்டால் ரெண்டு மூனு கேட்டவார்த்தைகளை சொல்லிக்கூட என்னை கட்டிப்பிடித்துக் கொள்வார். ஆனால் விஜய் சார் அமைதியாக வந்து கட்டிப்பிடித்தபோதே அவர் என்ன நினைக்கிறார் அவருடைய அன்பு எனக்கு தெரிந்துகொள்ள முடியும். அவர் அதை செய்வதே ரொம்ப பெரிய விஷயம். இந்த இரண்டு தருணங்களுமே என் வாழ்க்கையில் மிக நெருக்கமான தருணங்கள்தான். ' என்று வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.