தி கோட் 


விஜய் நடித்த தி கோட் படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. திருவிழாப்போல் ரசிகர்கள் கூட்டம் திரையரங்கில் அலைமோத காத்திருக்கிறது. இப்படத்தின் மீது அடுத்தடுத்து எதிர்பார்ப்புகளை கூட்டி வருகிறார்கள் படக்குழுவினர். படத்தில் என்ன என்ன ஆச்சரியம் காத்திருக்கிறது என்று பார்க்க விஜய் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். குறிப்பாக அஜித்தின் மங்காத்தா படத்தை விட இப்படம் பலமடங்கு பயங்கரமாக இருக்கும் என்று வெங்கட் பிரபு தெரிவித்துள்ளது விஜய் மட்டும் இல்லாமல் அஜித் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்புகளை கூட்டியுள்ளது என்று சொல்லலாம். வெங்கட் பிரபு இயக்கிய படங்களில் மிகப்பெரிய ஹிட் அடித்த படம் மங்காத்தா. அதே நேரத்தில் அஜித்தின் கரியரில் மிக முக்கியமான படமாக மங்காத்தா எப்போதும் இருக்கும். இதனால் அஜித்  விஜய் ரசிகர்கள் இடையில் சமூக வலைதளங்களில் மோதலும் ஏற்படுகிறது. ஆனால் அஜித் மற்றும் விஜய் இடையில் எப்போதும் ஒரு நட்புறவு இருந்துகொண்டே வருவதையும் இயக்குநர் தெரிவித்துள்ளார்


குறிப்பாக மங்காத்தா படத்தின்போதே அஜித் நீ விஜயுடன் வேலை செய்யனும் மங்காத்தாவை விட 100 மடங்கு சுப்பரா கோட் படம் இருக்கவேண்டும் என்று அஜித் சொன்னதாக வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார். தற்போது தி கோட் படத்தின் பாடலை பார்த்து அஜித் கொடுத்த ரியாக்‌ஷனை வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார்.


மட்ட பாடலை பார்த்து அஜித் கொடுத்த ரியாக்‌ஷன் 


தி கோட் படத்தில் வேலைகளுக்கு இடையில் இயக்குநர் வெங்கட் பிரபு அஜர்பைஜானில் நடிகர் அஜித்தை சந்தித்தார். அப்போது தி கோட் படத்தின் மட்ட பாடலை வெங்கட் பிரபு அஜித்திற்கு காட்டியிருக்கிறார். இதைப் பார்த்த அஜித்  பயங்கர ஹேப்பி ஆகிவிட்டதாகவும்  தன் அருகில் இருப்பவர்களையும் கூப்பிட்டு அந்த பாட்டை காட்டியதாகவும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். பின் தான் நடித்து வரும் குட் பேட் அக்லி படத்தின் பாடல் ஒன்றையும் காட்டியிருக்கிறார் அஜித்.






அஜித்தை பார்த்து திரும்பிய வெங்கட் பிரபுவிடம் என்னடா அஜர்பைஜான் போய் ஒரே ஜாலியா . நல்லா எஞ்சாய் பண்ணீங்களா?என்று விஜய் அவரிடம் கேட்டதாக வெங்கட் பிரபு பகிர்ந்துகொண்டுள்ளார். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ஜாலியாக எடுத்துக் கொள்ளும் நடிகர்கள் தான் என வெங்கட்  பிரபு கூறினார்