கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லாத படங்களில் இனிமேல் நடிக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார் தங்கலான் பட  நடிகை மாளவிகா மோகனன்.


மாளவிகா மோகனன்


தமிழ் திரைப்பட உலகிற்கு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர்ஸ்டார்  ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தில் அறிமுகமானார் மாளவிகா மோகனன். இந்த படத்தில் அவர் பெரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும் இராணியத் திரைப்பட இயக்குனரான மஜித் மஜிதி முதல் முதலாக இயக்கிய இந்தியத் திரைப்படமான பியாண்ட் தி க்ளவுட்ஸ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு அமைந்தது.


இந்த படத்தின் வாயிலாக இவர் தமிழ் மட்டுமில்லாமல் பாலிவுட் ரசிகர்களையும் ஈர்த்தார். இதனை தொடர்ந்து மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார் மாளவிகா. சமூக வலைதளங்களில் தனது ஃபேஷனிற்காகவும் ஃபிட்னசிற்காகவும் பரவலாக அறியப்படுபவர் மாளவிகா. தனது கரீயரை மாடலாக தொடங்கியவர் என்பதாலேயே பேஷனில் மாளவிகா எப்போதும் அசத்தக்கூடியவராக இருந்து வருகிறார். அதே நேரத்தில் ஃபிட்னஸில் அதிகமாக கவனம் செலுத்தியும் வருகிறார்.


கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லயென்றால் நோ சொல்வேன்


தனது சினிமா வாழ்வின் தொடக்கத்தில் இருந்தே மிகப்பெரிய ஸ்டார்களின் படங்களில் மாளவிகா நடித்து வந்தாலும் இந்தப் படங்களில் அவரது கதாபாத்திரத்திற்கு பெரிய அளவிலான முக்கியத்துவம் எதுவும் இருக்கவில்லை. தற்போது தங்கலான் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள மாளவிகா இந்திய யுத்ரா என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார். தனது அடுத்தப் படங்களைத் தேர்வு செய்து வரும் மாளவிகா கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லாத படங்களில் இனி நடிக்கப் போவதில்லை என கூறியுள்ளார். ”எவ்வளவு பெரிய பட்ஜட்டாக இருந்தாலும் சரி... ஏன் 500 கோடி பட்ஜட்டில் எடுக்கப்படும் படமாக இருந்தாலும் அதில் தனது கதாபாத்திரத்திற்கு ஏதாவது முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே தான் அத்தகைய படங்களில் நடிப்பேன்” என் அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் எவ்வளவு பெரிய வெற்றிப்படமாக இருந்தாலும் அதில் முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரத்தில் நடித்தால் மக்கள் அதை மறந்துதான் போவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.


தங்கலான்


பா ரஞ்சித் இயக்கி விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோர் நடித்துள்ள தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஜி.வி பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு தங்கலான் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.