ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் சூர்யா ஜாஸ்மின் கழுத்தில் தாலி கட்ட மணகோலத்தில் இருந்தார்.  இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


அதாவது, தாரா அக்ஷதையுடன் மாரிக்கு நேராக வந்து சவால் விடுவது பெருசு கிடையாது. அந்த சவாலில் ஜெயித்து காட்ட வேண்டும், இப்போ என்ன பண்ண போற என்று கேட்கிறார். அதற்கு மாரி பதில் சொல்ல முடியாமல் நிற்கிறாள். ஐயர் மந்தரம் சொல்லி முடித்து தாலியை சூர்யா கையில் கொடுக்கிறார்.  சூர்யா ஜாஸ்மின் கழுத்தில் கட்ட போகும் கடைசி நொடியில் மண்டபத்திற்குள் முருகன் என்ட்ரி கொடுக்க அனைவரும் ஷாக் ஆகின்றனர்.


தொடர்ந்து, முருகன் நான் தான் ஜாஸ்மின் கழுத்தில் தாலி கட்டுவேன் என்று சொல்ல இவ்வளவு நேரம் எங்க போயிருந்த என்று எல்லாரும் கேட்கின்றனர். தாராவை பார்க்கும் முருகன் 4 பேர் வந்து என்னை கட்டையால் அடித்து கடத்தி விட்டதாகவும் அங்கிருந்து தப்பி வந்ததாகவும் சொல்கிறார். தாரா, நீ” சொல்ற கதையெல்லாம் நம்ப முடியாது.” என்று பதிலளிக்கிறார். 


’ஜாஸ்மினும் என்னை கேவலப்படுத்தி லெட்டர் எழுதி வச்சிட்டு போயிட்டு இப்போ வந்தா உன்னை கல்யாணம்  பண்ணிக்கணுமா என்று பேசுகிறாள். இந்த நேரம் பார்த்து மயக்கம் தெளிந்து கங்காதரன் எழுந்து கொள்கிரார்.  இதையெடுத்து அவர் வெளியே வந்து  தாராவின் தலையை துப்பாக்கியை வைத்து மிரட்டுகிறார். முருகனை ஜாஸ்மின் கழுத்தில் தாலி கட்ட சொல்லு என்கிறார். முருகனும் மணமேடை ஏறி ஜாஸ்மின் கழுத்தில் தாலி கட்டுகிரார்.  இப்படியான நிலையில் அடுத்ததாக என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் எபிசோட் முடிந்துள்ளது.