தமிழில் உள்ள முன்னணி தொலைக்காட்சியாக ஜீ தமிழ் திகழ்கிறது. இந்த தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் ஐ லவ் யூ என்று சொல்ல தீபா ஆனந்த கண்ணீருடன் கட்டியணைத்து கொண்ட நிலையில் இன்று நடக்க போவது? என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


ஐ லவ் யூ சொல்லும் கார்த்திக்:


தீபா கார்த்திக்கிடம் இன்னொரு முறை ஐ லவ் யூ என்று சொல்லுமாறு கேட்க, கார்த்திக் அதெல்லாம் ஒருமுறை தான் சொல்ல முடியும் என்கிறான். மேலும் நமக்குள்ள இந்த வாங்க போங்க.. சார் எல்லாம் வேண்டாம். அதையெல்லாம் மாற்றனும் என்று சொல்ல தீபாவும் சரி என்கிறாள். 


அடுத்து ஐஸ்வர்யாவுக்கு ஒரு போன் கால் வர அவளும் போனை எடுக்க ரியா நான் போலீசில் இருந்து தப்பி விட்டேன், நீ தான்  எனக்கு உதவி செய்யணும் என்று சொல்ல ஐஸ்வர்யா நானே இந்த வீட்டுக்குள்ள இப்போ தான் நுழைந்து இருக்கேன் என்று கூறி மறுப்புத் தெரிவிக்கிறாள். 


கடத்தப்பட்ட தீபா:


ரியா அவளை மிரட்ட ஐஸ்வர்யா வேறு வழியின்றி ஓகே சொல்ல ரம்யா, ரியா, ஐஸ்வர்யா என மூவரும் கூட்டு சேருகின்றனர், பிறகு தீபாவை கடத்த திட்டமிடுகின்றனர். ஐஸ்வர்யா தீபாவுக்கு தெரியாமல் மயக்க மருந்தை கொடுக்க தீபாவும் அதை குடித்து மயங்கி விழுகிறாள். 


இதையடுத்து ரம்யா, ரியா, ஐஸ்வர்யா என மூவரும் சேர்ந்து தீபாவை மண்டபத்தில் இருந்து கடத்தி செல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.