தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராஜசேகர் குற்றவாளியை கண்டுபிடிக்கும் வேளையில் இறங்கிய நிலையில் மஹா அர்ச்சனாவின் கையை பாலில் விட வைத்து அந்த போட்டோவை எடுத்து விட்டாள். இதனை தொடர்ந்து இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


அதாவது இவர்கள் ஏதோ மறைக்குற மாதிரி இருக்கே என்று சீதா சந்தேகம் அடைகிறாள், அப்போது வேலைக்காரி அர்ச்சனாவுக்கு மருந்து போட்டு விசிறி கொண்டிருக்கும் போது சீதா மீராவுக்கு போன் போட்டு அந்த ரவுடியை பிடிச்சிட்டாங்களாம், இதை செய்ய சொன்னது யார்னு மட்டும் தான் கண்டு பிடிக்கணும், இன்னைக்குள் பிடித்து விடுவார்களாம் என்று சொல்ல அதை கேட்டு அர்ச்சனா அதிர்ச்சி அடைகிறாள்.






அதன் பிறகு ராம் சீதாவுக்காக ஐஸ் கிரீம் வாங்கி வந்து கொடுத்து அவளுடன் பேச இருவருக்கும் இடையே ரொமான்ஸ் நடக்கிறது, அர்ச்சனா மகாவிடம் சென்று சீதா போனில் பேசிய விஷயத்தை சொல்ல மகா ரவுடிக்கு போன் போட்டு பேச அவன் பணத்தை கேட்டு மிரட்டுகிறான், மகா நீ இருக்க இடத்துக்கு எல்லாம் என்னால் வர முடியாது என்று போனை வைத்து விடுகிறாள்.


இதனால் ரவுடி வீட்டிற்கு வந்து நிற்க மகாவும் அர்ச்சனாவும் அதிர்ச்சி அடைகின்றனர். அதன் பிறகு ராம் அங்கு வர தெரிந்தவர் என்று சொல்லி சமாளித்து உள்ளே அழைத்து செல்ல முயற்சிக்க சீதா வந்து விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.