தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது ஜீ தமிழ். இதில் தினந்தோறும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சாட்டையை எடுத்த ரகுராம் சீனுவை அடித்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம். 


சீனுவை துரத்தும் ரகுராம்:

ரகுராம் சீனுவை சாட்டையால் வெளுத்து எடுக்க, மாயா குறுக்கே வந்து தடுக்கிறார். ரகுராம் நீ செய்த தப்பை சரி செய்ய பார்த்து இருக்க, ஆனா அவன் மேலும் மேலும் தப்பு பண்ண தூண்டி இருக்கான். அவனை மன்னிக்க முடியாது என்று அதிர்ச்சி கொடுப்பதோடு சீனுவை பிடித்து வெளியே தள்ளி இனிமே இந்த வீட்டில்  உனக்கு இடம் இல்லை என துரத்துகிறார்.


இதனால் எல்லோரும் சோகம் அடைகின்றனர். மாயா கண்கலங்கியபடி மொட்டை மாடிக்கு செல்ல சீனு வெளியில் கதவை பிடித்தபடி நிற்க, மாயா மனதுக்குள் என்னை மன்னிச்சுடு சீனு பெரியப்பா உன்னை வீட்ட விட்டு வெளியே அனுப்புவார்னு யோசிக்கல என்று  வருத்தப்படுகிறாள். அதேபோல் சீனு மாயாவை பார்த்து நான் தான் எல்லாத்துக்கும் காரணம் என்னை மன்னிச்சிடு என மனதுக்குள் வருந்துகிறான்.


வாசலிலே நிற்கும் சீனு:


சீனு விடியும் வரைக்கும் வாசலிலேயே காத்திருக்க மறுநாள் காலையில் மணி வெளியே எழுந்து வந்து சீனுவை பார்த்து மன்னிப்பு கேட்டு வீட்டுக்குள் கூப்பிட மாமா மன்னிக்கிற வரைக்கும் நான் வீட்டுக்குள்ள வரமாட்டேன் என்று சொல்கிறான். இந்த இடத்தை விட்டு நகரவும் மாட்டேன் என சொல்கிறான். அதன் பிறகு ஜானகி ரகுராமிடம் மன்னிப்பு கேட்க, அவர் நீயும் இந்த குடும்பத்தோட கௌரவத்தை காப்பாத்த தனியாளா போராடி இருக்க, நான் அத புரிஞ்சுக்காம விட்டுட்டேன் என்று வருத்தப்படுகிறார். 


மறுபக்கம் பத்மா ரமணியிடம் எல்லா தப்பும் பண்ண மாயா இந்த வீட்டுக்குள்ள இருக்கா, என் பையன் வெளியே இருக்கான் என்று ஆதங்கப்படுகிறார். சீனு இப்படி பண்ணலாமா? என்று கோபம் அடைகிறாள் பத்மா. எல்லாம் தெரிஞ்ச ஜானகி அண்ணி முன்னாடியே இந்த விஷயத்தை சொல்லி இருந்தா இவ்வளவு பிரச்சனை வந்திருக்காதுல என்று பழியை தூக்கி போட ரமணி ஜானகி மீது எறிந்து விழுகிறாள்.


ஓசி சோறு பத்மா:


சீனு இந்த வீட்டுக்குள்ள வரணும் அதுக்கு நீ தான் ஏதாவது பண்ணனும் என்று கண்டிஷன் போட, ரகுராம் சீனுவை மன்னிக்கவே முடியாது என்று சொல்லிவிட பத்மா கோபப்பட்டு பேச சிவராமன் நீ கல்யாணம் ஆகி போனதும் வீட்டை விட்டு இங்க வந்துட்ட உங்களையும் சேர்த்து அண்ணி தானே பாத்துக்கிறாங்க என்று வார்த்தையை விட பத்மா அப்போ என்னை ஓசி சோறு என்று சொல்றியா என்று கோபப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.