தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய்.


இந்த சீரியலில் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் எழில் குழந்தைகளுக்கு இனிமே பாக்கெட் மணி கிடையாது என்று கண்டிஷன் போட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


அதாவது விஷயம் தெரியாத சுடர் குழந்தைகளை ஸ்கூலில் விட்டுவிட்டு காரில் வந்து கொண்டிருக்கும் போது இராமையாவிடம் நேர வண்டிய வீட்டுக்கு விடுங்க போனது மூக்கை பிடிக்க நல்லா சாப்பிடணும் என்று கூறுகிறாள்.


அடுத்ததாக ராமையா எழில் பிள்ளைகளுக்கு பாக்கெட் மணியை கட் பண்ண விஷயத்தை கூறுகிறார். இந்துமதி அம்மா இருக்கும்போது தினமும் குழந்தைகளுக்கு பிடித்தது சமைத்துக் கொண்டு போய் ஊட்டி விட்டுட்டு வருவாங்க. அவங்க போனதுக்கு அப்புறம் பசங்களுக்கு பிடிச்சது சாப்பிடறதுக்காக கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்புவோம். இப்போ மதியம் என்ன பண்ணப் போகிறது என்று தெரியவில்லை, நான் தான் பொய் ஏதாவது வாங்கி கொடுக்கணும் என்று சொல்ல சுடர் வருத்தப்படுகிறாள்.


அதன் பிறகு ஸ்கூலில் கொண்டு பணம் சாப்பாடு பிடிக்காமல் குழந்தைகள் எல்லாரும் கொட்டி விட்டு பசியில் கிடைக்க அஞ்சலிக்கு அபி தண்ணீர் கொடுத்து பொருத்துக்க என்று சொல்கிறாள். தங்களது அம்மாவை நினைத்து வருத்தப்படுகின்றனர்.


அதன் பிறகு இவர்கள் ஸ்கூல் முடித்து வீட்டுக்கு வர வீடு மணக்கும் வகையில் பிரியாணி செய்து வைத்திருக்கிறாள் சுடர். இதைப் பார்த்து கவின் அஞ்சலி காவியா ஆகியோர் பிரியாணி மீது ஆசை கொள்ள அபி சாப்பிட வேண்டாம் என்று தடுக்கிறாள்.


நாங்க பிரியாணி சாப்பிட்டாலும் அவ மேல கோபமாகத்தான் இருப்போம் என்று சொல்லி சாப்பிட்டு பிரியாணி சூப்பர் சூப்பர் என்று சொல்லி அபியையும் சாப்பிட தூண்டுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலின் இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.