மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் சங்கிலி மீனாட்சி வீட்டிற்கு சென்று நகைகளை திருடும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 


இன்றைய எபிசோடில் இரவு மீனாட்சி வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்க சங்கிலி மீனாட்சி வீட்டிற்கு சென்று, பீரோவை திறந்து, கல்யாணத்துக்கு வாங்கி வைத்திருந்த நகைகளை திருடிக் கொண்டு போகிறான்.வெளியே காரில் புஷ்பா அமர்ந்திருக்க சங்கிலி புஷ்பாவிடம் நகைகளை காட்டுகிறான். புஷ்பா கோகிலாவுக்கு போன் செய்து மீனாட்சியிடம் நகைகள் இருக்காது இதை வைத்து கார்த்திக் கல்யாணத்தை நிறுத்தி விடலாம் என்று சொல்கிறாள்.


மறுநாள் காலை நகைகளை பார்க்க கோகிலா வருகிறாள், அவள் கூடவே புஷ்பாவும் வருகிறாள். கோகிலா நகைகளை பார்க்க கேட்க, துர்கா நகை பெட்டியை கொண்டு வந்து நகைகளை எடுத்து வைக்க, அது மீனாட்சியின் பரம்பரை நகையாக இருக்க, இதை பார்த்த புஷ்பா ஷாக்காகிறாள்.






புஷ்பா இது என்னுடைய நகை என்று சொல்ல மீனாட்சியும் இது என் அம்மா போட்ட பரம்பரை நகை என்று சொல்கிறார்கள்.  உன்னிடம் எப்படி இந்த நகை வந்தது என்று புஷ்பா கேட்க , மீனாட்சி புரியாமல் நிற்கிறாள். இதனையடுத்து புஷ்பாவின் நகை புஷ்பாவின் வீட்டில் இருக்கும் என்று வெற்றி சொல்கிறான்.


புஷ்பா தன் வீட்டிற்கு அவர்களை கூட்டி சென்று நகைகளை காட்டுகிறாள். ஆனால் அங்கு ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் மீனாட்சி நகையை பார்த்த வெற்றி, போலீஸ் கம்பளைண்ட் கொடுப்பதாக மிரட்ட சங்கிலி புஷ்பா பயப்படுகின்றனர். பிறகு மீனாட்சி புஷ்பாவை திட்டி புஷ்பாவின் நகையை அவளிடம் கொடுத்து விட்டு வரும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.