மாரி சீரியலில் ஜாஸ்மின் மதுபோதையில் போலீஸை அடிக்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 


தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி.  முன்னதாக நேற்றைய எபிசோடில் மாரி தனக்கு மது கொடுத்தது யார் என தெரியாது என சொல்வதால் சூர்யா குழப்பமடைகிறார். அப்போது அங்கு மாரியின் அம்மா தீபாவளி சீர் கொடுக்க வருகிறார். 


அவரிடம் ஜாஸ்மின் விஷயம் பற்றி யாரும் சொல்ல வேண்டாம் என சூர்யா தெரிவிக்கிறார். ஹாசினி செய்த வேலையால் சூர்யா கையால் மாரிக்கும் மோதிரம் மாற்றும் நிகழ்வு நடைபெறுகிறது. அதனைக் கண்டு தாரா, ஜாஸ்மின் கடுப்பாகின்றனர். இன்றைய எபிசோடில் கோபத்தில் ஜாஸ்மின் மாரியின் ஜிமிக்கியை உடைக்க முயலும் போது அதனை மாரி பார்த்து கோபத்தில் தடுத்து நிறுத்துகிறார்.


இது சூர்யாவுக்கு சொந்தமானது என்றும், அதனை உடைக்க உனக்கு உரிமை இல்லை என்றும் கூறி  அதை எடுத்துக் கொண்டு சூர்யா ரூமில் வைக்கிறார். இதனையடுத்து மாரி பாத்ரூமில் தெய்வானை கொடுத்த மோதிரத்தை கழட்டி கொண்டிருக்கும் போது அதனை சூர்யா பார்க்கிறார். ஏன் கழற்றுகிறாய் என்று அவர் கேட்க, இல்ல நீங்க சம்பந்தமில்லாமல் தான் அந்த மோதிரத்தை போட்டீங்க. இதை பார்க்கும்போது உங்களுக்கு மனசு வருத்தப்படும் அதனால்தான் கழற்ற நினைச்சேன் என மாரி காரணம் கூறுகிறார். 






பின்னர் மாரியும், சூர்யாவும் மோதிரத்தை கழற்ற முயற்சிக்க மோதிரம் வராமல் இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஜாஸ்மின், மாரி திட்டியதை நினைத்து பார்த்து மது குடிக்கிறார். பின்னர் போதையில் காரில் வரும்போது போலீசார் அவரை தடுத்து நிறுத்துகிறார்கள். நான் தேவி குரூப் ஆஃப் கம்பெனிஸ் ஓனர் சூர்யாவின் மனைவி என்று சொல்லி போலீசை ஜாஸ்மின்  அடித்து விடுகிறார். 


அதை செய்தியாளர் படம் பிடித்து டிவியில் போட, அதை ஹாசினி பார்த்துவிட்டு சூர்யாவிடம் விஷயத்தை சொல்கிறார். மேலும் அவரை அழைத்துக் கொண்டு டிவியில் செய்தியை காட்ட நினைக்கிறார்.  இந்த விஷயம் அறிந்து சங்கர பாண்டி தாராவிடம் சொல்லி யாருக்கும் தெரியாமல் வீட்டின் மின் இணைப்பை துண்டிக்கிறார். சூர்யாவை தாரா சமாளித்து அனுப்ப ஜாஸ்மின் போதையில் வீட்டுக்குள் வரும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது.