தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.வாரத்தின் ஏழு நாட்களும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நேற்றைய எபிசோட்டில் அபிராமி பல்லவிக்கு கிப்ட் கொடுக்க வேண்டும் என்று சொல்ல கார்த்திகேயன் தீபாவிடம் பல்லவியை பற்றி பெருமையாக பேசிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


அதாவது, சிதம்பரம் கார்த்திக்கு சவால் விட பதிலுக்கு கார்த்திக் உங்களால் என்ன அவ்வளவு சீக்கிரம் ஜெயித்து வெளியே அனுப்ப முடியாது என சவால் விடுகிறான்.அதனைத் தொடர்ந்து மீனாட்சி கார்த்திக்கிடம் பல்லவி கோவிலுக்கு வந்து முகத்தை வாங்கிக் கொள்வதாகவும் ஆனால் முகத்தை காட்ட மாட்டேன் என சொன்னதாகவும் சொல்ல கார்த்திக் சரி என்று சம்மதம் தெரிவிக்கிறான்.


அதன் பிறகு அபிராமி கொடுத்த செயின் உடன் கார்த்திக் கோவிலுக்கு வர தீபா பல்லவியாக முகத்தை மறைத்துக் கொண்டு இருக்கும் பின்னால் நின்று கொண்டு கையை மட்டும் நீட்டி கார்த்திக் உங்களுடைய வார்த்தையை நான் மதிக்கிறேன் என்று சொல்லி செயினை கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்புகிறான்.






அதன் பிறகு மீனாட்சி தீபாவிடம் நீ கார்த்திக்கிடம் உண்மையை சொல்லி இருக்கலாம் நிச்சயம் அவர் உன்னை ஏத்துக்கிட்டு இருப்பார். எல்லா பிரச்சனையும் இதோட தீர்ந்திருக்கும் என்று பேசுகிறாள்.பிறகு வடநாட்டு நிறுவனம் ஒன்று இசை உரிமையை வாங்குவதற்காக ஏலம் ஒன்றை நடத்த சிதம்பரம் விற்பனை எல்லா இசையமைப்பாளர்களும் அந்த நிகழ்ச்சிக்கு வருகின்றனர். சிதம்பரம் வந்ததும் சரி ஆரம்பிக்கலாம் என்று சொல்ல இன்னொரு முக்கியமான நபர் வரனும் அதுக்காக தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கோம் என்று சொல்லிக் கொண்டிருக்க கார்த்திக் என்ட்ரி கொடுக்கிறான்.


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.