தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் மற்றும் ரேவதி விமான நிலையம் வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
தோழி தரும் அட்வைஸ்:
அதாவது ரேவதி கார்த்திக்காக ஒரு கிப்ட் வாங்கி கொடுக்கிறாள். அதன் பிறகு இருவரும் காரில் வந்து கொண்டிருக்க திடீரென கார் ரிப்பேர் ஆகிவிடுகிறது. இதனைத் தொடர்ந்து ஒரு ஆட்டோவில் ஏர்போர்ட் வருகின்றனர்.
ஏர்போர்ட்டில் ரேவதி தன்னுடைய தோழியை சந்திக்க அப்போது அவள் நான் என் அனுபவத்துல சொல்றேன், வெளிநாடு எல்லாம் போகாத, உன்னோட குடும்பத்தை ரொம்ப மிஸ் பண்ணுவ, ஏன் இங்க வந்தனு வருத்தப்படுவ என்று அறிவுரை வழங்குகிறாள்.
கார்த்தியை கட்டிப்பிடித்த ரேவதி:
இதைத்தொடர்ந்து பரமேஸ்வரி பாட்டி ரேவதிக்கு போன் செய்து உன்கிட்ட பேசி ரொம்ப நாளாச்சு என்பதால் ஃபோன் செய்ததாக சொல்லி பேசுகிறாள். அடுத்து கார்த்திக் மற்றும் ரேவதி லிப்ட் செல்லும்போது திடீரென கரண்ட் கட் ஆகி லிப்ட் பாதியில் நிற்க ரேவதி பயத்தில் கார்த்தியை லைட்டாக கட்டிப்பிடித்துக் கொள்கிறாள்.
கார்த்திக் பயப்படாதீங்க என்று சொல்லி ரேவதியை கூல் செய்கிறான். இங்கே மயில்வாகனம் ரோகிணியிடம் ரேவதி ஆஸ்திரேலியா செல்லும் விஷயத்தை சொல்ல அவள் ரேவதிக்கு போன் செய்து அட்வைஸ் கொடுக்கிறாள்.
அடுத்து என்ன நடக்கும்?
இதன் பிறகு ரேவதி நீ நல்லவன் தான் அது எனக்கு தெரியும், எனக்கு என்ன முடிவு எடுக்கிறதுன்னு தெரியல என்று சொல்ல கார்த்திக் உங்களுக்கு எது சரின்னு படுதோ அதை செய்யுங்க என்று சொல்லி ரேவதி ஏர்போர்ட்டில் ட்ராப் செய்துவிட்டு வீட்டிற்கு கிளம்பி வருகிறான்.
இன்னொரு பக்கம் அபிராமி பழனிக்கு பாதயாத்திரை வந்து கார்த்திக் ரேவதி ஒன்னு ஒற்றுமையா இருக்கணும் என்று பூஜை செய்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.