தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 

Continues below advertisement

சாமுண்டீஸ்வரி ரகசிய திட்டம்:

நேற்றைய எபிசோடில் கார்த்திக் மற்றும் ரேவதி ஒன்றாக இருப்பதை சாமுண்டீஸ்வரி அறிந்த நிலையில், இன்று பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறுகின்றன.

சாமுண்டீஸ்வரி, ரேவதியை கார்த்திக்கிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிக்க ஒரு ரகசிய திட்டத்தை தீட்டுகிறாள். இந்த சூழலில், வீட்டில் அனைவரும் ஒன்றாக இருக்கும் நேரத்தில், கனடாவில் வசிக்கும் தனது தோழி ஈஸ்வரியிடமிருந்து சாமுண்டீஸ்வரிக்கு தொலைபேசி அழைப்பு வருகிறது.

Continues below advertisement

கனடா செல்ல ரெடியாகும் ரேவதி:

தனது மகளின் திருமணத்திற்கு கண்டிப்பாக வர வேண்டும் என்று ஈஸ்வரி அழைப்பு விடுக்க, சாமுண்டீஸ்வரியும் வருவதாக உறுதியளிக்கிறாள். ஆனால் தனக்கு முக்கிய வேலை இருப்பதாக கூறி, வீட்டில் இருக்கும் யாரையாவது கனடாவுக்கு அனுப்ப முடிவு செய்கிறாள்.

இதைக் கேட்டதும் ஒவ்வொருவரும் பாஸ்போர்ட் இல்லை, பயணம் செய்ய முடியாது என்று காரணம் கூறுகின்றனர். அப்போது, "என்னிடம் பாஸ்போர்ட்டும் இருக்கு, விசாவும் இருக்கு... நான் போயிட்டு வர்றேன்!" என்று ரேவதி சொல்ல, சாமுண்டீஸ்வரியின் முகத்தில் மர்மமான மகிழ்ச்சி தெரிகிறது.

வார்னிங்:

உடனே சந்திரகலாவிடம் இரண்டு டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்யச் சொல்கிறாள். ஒன்று உண்மையான டிக்கெட், மற்றொன்று அதேபோன்று இருக்கும் டூப்ளிகேட் டிக்கெட். இந்த திட்டத்தின் பின்னால் என்ன சதி இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.

மேலும், இந்த விஷயம் எந்தக் காரணத்திற்காகவும் கார்த்திக்குத் தெரியக்கூடாது என்று சாமுண்டீஸ்வரி எச்சரிக்கிறாள். ஆனால் எதிர்பாராத விதமாக, ரேவதி கனடா செல்லும் விஷயத்தை கார்த்திக்கே தெரிவித்து விடுகிறாள்.

மறுபக்கம், சந்திரகலா சிவனாண்டியை சந்தித்து தனது திட்டத்தை விவரிக்கிறாள். சாமுண்டீஸ்வரியின் சதி வெற்றிபெறுமா? கனடா செல்லும் ரேவதி யாருடைய வலையில் சிக்கப் போகிறார்? பரபரப்பான திருப்பங்களுடன் அடுத்ததாக என்ன நடக்கப் போகிறது என்பதை காண, கார்த்திகை தீபம் சீரியலை இன்று இரவு 9 மணிக்கு ஜீ தமிழில் தவறாமல் காணுங்கள்!