தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஊர்மக்கள் சாமுண்டீஸ்வரி இடம் நகை  கொள்ளையடிக்கப்பட்டதை பற்றி புகார் தெரிவித்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Continues below advertisement

சொத்தை எழுதிக் கொடுக்கத் தயாரான சாமுண்டீஸ்வரி:

அதாவது, பஞ்சாயத்தை கூட்டிய சாமுண்டீஸ்வரி கொள்ளையடிக்கப்பட்ட நகைகளுக்காக தனது சொத்துக்களை கொடுப்பதாக சொல்லி வாக்கு கொடுக்க, குடும்பத்தினர் கொஞ்சம் யோசிக்கலாம் என்று சொல்வது சாமுண்டீஸ்வரி தனது முடிவில் உறுதியாக இருக்கிறாள்.

களத்தில் இறங்கிய கார்த்திக்:

இந்த சமயத்தில் கார்த்திக், அத்தை அதெல்லாம் தேவையே இல்லை அவங்க கிட்ட கொடுத்த நகைல. நான் ட்ராக்கர் வச்சிருக்கேன். அதனால அவங்கள ஈசியா கண்டுபிடிச்சு நகைகளை மீட்டு விடலாம் என்று சொல்கிறான். இதை தொடர்ந்து கார்த்திக் பல்வேறு இடங்களில் அலைகிறான். 

Continues below advertisement

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.