தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி ரேவதிக்கு மருதுவுக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க ‌ 

Continues below advertisement

பிச்சைக்காரனாகிய மருது:

அதாவது, கார்த்திக் மயில்வாகனத்திடம் திருமணத்தை தடுத்து நிறுத்த ஐடியா ஒன்றை சொல்ல இங்கே ரேவதி மற்றும் மருது என இருவரும் ஒன்றாக உட்காருகின்றனர். மருது ரேவதி கழுத்தில் மாலையிட போகும் சமயத்தில் அவனுக்கு தலையில் காக்கா எச்சமிடுகிறது. 

இதனால் சாமியார் அபச குணம் என்று சொல்லி தலைக்கு குளித்துவிட்டு வர சொல்ல மருது அங்கிருந்து எழுந்து செல்கிறான். பிறகு மருதுவை தலையில் தாக்கி அவனை கட்டிப்போட்டு முகத்தை மறைத்து பிச்சைக்காரர்கள் வரிசையில் உட்கார வைக்கின்றனர். 

Continues below advertisement

மாலையிட்ட கார்த்திக்:

சாமுண்டீஸ்வரி மற்றும் சந்திரா கலா மருதுவை காணவில்லை என தேடச் செல்ல அதற்கிடையில் கார்த்திக் அதே கோவிலுக்கு வந்து ரேவதி கழுத்தில் மாலையை போடுகிறான். மருது பிச்சைக்காரர்களுடன் உட்கார்ந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சியான சாமுண்டீஸ்வரி அவனை அங்கிருந்து அழைத்து வருகிறாள். 

கீழ்த்தரம்:

இங்கே கார்த்திக் ரேவதி கழுத்தில் மாலையிட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கோபப்பட, கார்த்திக் சாமுண்டீஸ்வரி இடம் மாலையில் ஏதோ இருந்ததாக சொல்லி தாலியை கொடுக்கிறான். நீங்க இவ்வளவு கீழ்த்தரமா நடந்துப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கல என பதிலடி கொடுக்கின்றான். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.