தமிழில் பிரபலமான தொலைக்காட்சியாக திகழ்வது ஜீ தமிழ் தொலைக்காட்சி. ஜீ தமிழில் தினமும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் கீதா தீபாவாக புடவை கட்டிக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு வந்தார். இந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது? குறித்து பார்க்கலாம் வாங்க. 


தீபா கெட்டப்பில் கீதா:


கீதா வந்ததும் அவளை தீபாவாக நினைத்து மீனாட்சி கட்டிப்பிடித்து வரவேற்கின்றனர். அதே சமயத்தில் தீபாவை பார்த்து அதிர்ச்சி அடையும் ஐஸ்வர்யா இவ எப்படி இங்கு வந்தா? உண்மை எல்லாம் வெளிய வந்து மாட்டிப்போமோ? என்று பதறுகிறாள். 


பிறகு தீபாவை அபிராமி இருக்கும் அறைக்கு அழைத்துச் செல்கின்றனர். அபிராமி கண் திறக்காமலே இருந்து வந்த நிலையில், தீபாவின் குரலை கேட்டதும் அபிராமி கண் திறக்கிறாள். கார்த்திக் மற்றும் கீதா என இருவரும் வீட்டிற்கு கிளம்பி வருகின்றனர். 

மன்னிப்பு கேட்கும் கார்த்திக்:


கார்த்திக் எப்படி தீபாவாக நடிக்க ஒத்துக்கிட்டீங்க என்று கேட்க, நீங்க உங்க அம்மாவுக்காக என்று சொன்னதும் என் மனசு மாறிடுச்சு என்று சொல்லி சமாளிக்கும் கீதா, "இதுல என்னுடைய சுயநலமும் இருக்கு.. என்னை காப்பாத்திக்கிறதுக்காகத்தான் நான் இப்படி நடிக்கிறேன்" என மனதின் உள்ளேயே சொல்கிறாள்.


பிறகு கார்த்திக் நீங்க யாரு? என்ன ஏது? என்று விசாரிக்க கீதா கோபமாகி காரை நிறுத்த சொல்கிறாள். நான் தீபாவாக தொடர்ந்து நடிக்கணும்னா? என்னை பத்தி எந்த விஷயத்தையும் கேட்கக்கூடாது என கண்டிஷன் போடுகிறாள். 


இதைத் தொடர்ந்து கார்த்திக் மன்னிப்பு கேட்டு வீட்டுக்கு வந்து சேர, கீதா எனக்கு காபி குடிக்கணும் போல இருக்கு. எனக்கு காபி எல்லாம் போடத் தெரியாது, குடிக்க மட்டும்தான் தெரியும். போட்டு எடுத்துட்டு வா என ஆர்டர் போடுகிறாள்.  இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள். ‌