ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக தொடங்கியுள்ள புத்தம் புதிய சீரியல் இதயம். உயிர் பிரிந்தாலும் உண்மை காதல் என்றும் அழியாது என்பதை உரக்க சொல்லும் காதல் கதையாக மக்களின் மனங்களை உருவ வைக்க தொடங்கியுள்ளது.


மேலும் இந்த சீரியலின் முந்தைய எபிசோடில் வாசு தனது மகளின் கனவில் தோன்ற அந்த குழந்தை அப்பா என அலறி எழுந்து கொள்ள அதே நேரம் ஆபரேஷன் முடிந்து கண் விழிக்காமல் இருந்து வந்த ஆதி ஆபத்தை கடந்து கண் விழித்தான். இதனை தொடர்ந்து இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


ஆதி கண் விழித்ததும் அவனை பரிசோதனை செய்த டாக்டர் ஆதிக்கு இனி ஒரு பிரச்னையும் இல்ல நீங்க வீட்டிற்கு கூட்டி செல்லலாம் என்று சொல்ல குடும்பத்தினர் சந்தோஷத்தோடு ஆதியை வீட்டிற்கு அழைத்து செல்கின்றனர், மறுபக்கம் பாரதி வீட்டில் ரத்னம் தனது மனைவியை அழைத்து 16-ம் நாள் காரியம் முடிந்த கையோடு பாரதி இந்த வீட்டை விட்டு போய்டணும், குழந்தையை மட்டும் தான் நாம் வச்சிக்க போறோம், அதுக்கு அவளை தயாராக இருக்க சொல்லு என்று சொல்கிறார்.


இங்கே வீட்டிற்கு வரும் ஆதியை குடும்பத்தினர் சந்தோஷமாக வரவேற்க ஆதியின் மாமா பொண்ணு நீ இல்லாமல் நான் சாப்பிடவே இல்லை என்று டிராமா போட ஆதியின் அம்மா இன்னும் இரண்டு மாதம் கழித்து கல்யாணத்தை வைத்து கொள்ளலாம் என்று முடிவெடுக்கிறார். ஆதி தன்னுடைய மாமாவிடம் தனக்கு இதயம் குடுத்தது யார்? அந்த குடும்பத்தை நான் பார்க்கணும் என்று சொல்கிறான்.இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இதயம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.