சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.


விஜயா - மீனா:


விஜயா மீனாவிடம் முத்து தாலி பிரித்து கோர்க்கும் பங்ஷனுக்கு வருவது குறித்து சண்டை போடுகிறார். "அவருக்கு சரினு படுறத அவரு செய்யுறாரு" என மீனா சொல்கிறார். அதற்கு விஜயா, ”எப்டி உன் தம்பி கைய உடச்சானே அப்டியா?” என கேட்கிறார். ”அவனால பங்ஷன்ல எதாவது பிரச்சனை வந்ததுனு வை அப்றம் நான் பொல்லாதவளா ஆயிடுவேன்” என விஜயா சொல்கிறார். 


மீனா முத்துவிடம் சென்று ”தாலி பிரிச்சி கோர்க்குற பங்ஷனுக்கு போறோம் இல்ல அங்க வந்து நீங்க அமைதியா இருக்கணும்” என சொல்கிறார். அதற்கு முத்து ”புரியல” என்கிறார். பின் முத்துவை சண்டைப் போட வேண்டாம் என விஜயா சொன்னதை சொல்கிறார். 


வித்யாவின் யோசனை:


தாலி பிரித்து கோர்க்கும் பங்ஷன் குறித்து ரோகிணி வித்யாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்பாவாக ஒருத்தரை நடிக்க வைக்க வித்யா யோசனை சொல்கிறார். ”ஆல்ரெடி மாமாங்குற பேர்ல ஒரு ஆள் வந்து என்னை மாட்டி விட பார்த்தான்” என ரோகிணி சொல்கிறார். ”இந்த மனோஜ் கிட்ட வேற காசே இல்ல ஏய் உன்கிட்ட இருக்கா?” என வித்யாவிடம் கேட்கிறார். வித்யா இல்லை என சொன்னதும் ”நான் எங்க அம்மா கிட்ட கேட்டு பார்க்குறேன்” என சொல்லி விட்டு ரோகிணி தன் அம்மாவுக்கு செல்போனில் அழைத்து பேசுகிறார். 


ரோகிணியின் அம்மா ”மாப்ள எப்டி இருக்காரு வேலை கிடச்சதா அவருக்கு” என கேட்கிறார். அதற்கு ரோகிணி ”இன்னும் இல்லமா” என்கிறார். ”எனக்கு தாலி பிரிச்சி கோர்க்கணும்னு என் மாமியார் சொல்லி இருக்காங்க” என்கிறார். ”உன்கிட்ட பணம் இருக்கா?” என ரோகிணி கேட்கிறார். பின் தான் பணம் தருவதாக ரோகிணியின் அம்மா சொல்கிறார். ”உங்க அப்பாவை கூட்டிகிட்டு வர சொன்னாங்களே அதுக்கு என்ன பன்ன போற” என வித்யா கேட்கிறார். 


”முத்துவ ட்ரிகர் பண்னி விட்டா போதும் கண்டிப்பா எதாவது பிரச்சனை பண்ணுவான் அதை காரணம் காட்டி நான் எங்க அப்பாவை கூப்ட முடியாதுனு சொல்லிடுவேன்” என்கிறார் ரோகிணி. பின் விஜயா ரோகிணி வேலை செய்யும் பியூட்டி பார்லருக்கு வருகிறார். அப்போது ரோகிணியின் அம்மா ரோகிணிக்கு காசு கொண்டு வந்து கொடுக்கிறார். 


”அப்பா தாலி செயின் வாங்குறதுக்கு பணம் அனுப்பி வச்சாரு இப்போ தான் வித்ட்ரா பண்ணி எடுத்துட்டு வந்தேன்” என ரோகிணி விஜயாவிடம் சொல்கிறார். ”சம்மந்தி உன் மேல பாசமா தான் இருக்காரு” என விஜயா சொல்கிறார். ”அப்பா மட்டும் வராரா உங்க அம்மாவும் வராங்களா?” என கேட்கிறார். ”அப்பா மட்டும் தான் வருகிறார்” என ரோகிணி சொல்கிறார். ”பாவம் அவங்க தான் அல்ப அயிசுலயே செத்துப் போயிட்டாங்களே” என்கிறார் விஜயா இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.