சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.


முத்துவும் மீனாவும் புதுக் காரில் சென்றுக் கொண்டிருக்கின்றனர். ”ஏன் கார் வாங்கி கொடுக்கண்ணும்னு தோணுச்சி” என முத்து கேட்கிறார். ”என் புருஷன் எல்லோர் முன்னாடியும் கெளரவமா இருக்கணும்னு தான் வாங்கி கொடுத்தேன்” என்கிறார் மீனா. முத்து காரை நிறுத்தி விட்டு மீனாவுக்கு மல்லிப்பூ வாங்கி தலையில் வைத்து விடுகிறார். 


”இன்னும் எத்தனை நாளைக்குதான் இப்டி இருக்க போற வேலை வெட்டிக்கு எதாவது போற அபிப்பிராயம் இருக்கா இல்லையா?” என மனோஜிடம் கேட்கிறார் அண்ணாமலை. ”முத்துவ பார் கார் ஓட்டிக்கிட்டு இருந்தான் இப்போ கார் இல்ல ஆட்டோ ஓட்டுறான்” என்கிறார் அண்ணாமலை. உடனே விஜயா ”ஆமா அடுத்து ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டாம இருந்தா சரி தான்” என்கிறார். ”நீங்க வேணா பாருங்க மனோஜ் எல்லோர் முன்னாடியும் ராக்கெட் வேகத்துல போகப் போறான் பாருங்க” என்கிறார் விஜயா. 


ரோகிணி விஜயாவுக்கு ஒரு புது புடவையை கொண்டு வந்து கொடுத்து ”மாமா உங்களுக்காக மலேசியாவில் இருந்து அனுப்பினார்” என்று சொல்லுகிறார். ”மனோஜ் ஆண்டிக்கு இந்த கலர் சாரி ரொம்ப ப்ரிட்டியா இருக்கு இல்ல” என்கிறார் ரோகிணி. ”அது எனக்கு எப்பவும் எந்த கலர் புடவை கட்டினாலும் அழகா தான் இருக்கும்” என சொல்கிறார் விஜயா. ”ரொம்ப நல்லா இருக்குமா” என விஜயா சொல்கிறார். ”பின் இரு உனக்கு ஜூஸ் போட்டு எடுத்துட்டு வறேன்” என சொல்லி விட்டு விஜயா செல்கிறார்.  ”அப்பாடா நல்ல வேலை இவங்க கோவம் போய்டுச்சி ” என மனதிற்குள் நினைக்கிறார் ரோகினி. 


”மீனா தலை நிறைய மல்லிகைப்பூ வச்சி இருப்பதை பார்த்து விஜயா என்னடி இது கோயம்பேடு மார்க்கெட்டே உன் தலையில தான் இருக்கு” என கேட்கிறார். முத்து குடும்பத்தில் உள்ள அனைவரையும் வெளியே அழைத்துச் சென்று புது காரை காண்பிக்கிறார். ”ஏதுடா புதுக்கார் ”என அண்ணாமலை கேட்கிறார். மீனா வாங்கி கொடுத்தாப்பா என முத்து சொல்கிறார். இவ வாங்கி கொடுத்தாலா என விஜயா கேட்கிறார். 


”ம்மா இது புதுக்கார்லாம் இல்லை. செகண்ட் ஹேண்ட். ஒரு 3 லட்சம் போகும் அவ்ளோ தான்மா” என்கிறார் மனோஜ். ”டேய் ஒரு லட்சமா கூட இருக்கட்டும். என் பொண்டாட்டி உழச்சி வாங்கி கொடுத்தது” என முத்து சொல்கிறார். ”இப்போ சந்தோஷமா இருக்குடா” என அண்ணாமலை சொல்கிறார். ”ரோகிணி இன்னும் இந்த வீட்ல என்னென்ன பார்க்கணுமோ என விஜயா சொல்கிறார். ”ஒன்னும் இல்லாத வீட்ல இருந்து வந்தவளே இதெல்லாம் பண்றா” என விஜயா சொல்கிறார்.” நீ நெனச்சி இருந்தா இந்நேரம் அவன் முதலாளியா உட்கார்ந்து இருப்பான்” என விஜயா சொல்கிறார்.  இதைக்கேட்டு ரோகிணி ஷாக் ஆகி நிற்கிறார். இத்துடன் எபிசோட் நிறைவடைகிறது.