சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.


மீனாவும் முத்துவும் மாலை கட்டியவர்களுக்கு பணம் கொடுக்கின்றனர். ஆனால் அவர்கள் பணத்தை வாங்கிக் கொள்ள மறுக்கின்றனர். ”மீனா எங்கள் வீட்டு பொண்ணு” என சொல்கின்றனர். ”அக்கா இந்த காசு சம்பாதிக்குறது எல்லாம் பெரிய விஷயம் இல்ல. உங்கள மாதிரி பெரிய மனுஷங்கள சம்பாதிக்குறது தான் கஷ்டம்” என முத்து சொல்கிறார். 


அவர்கள் ”இந்தப் பணத்தை வச்சி என்ன பண்ண போற” என மீனாவிடம் கேட்கின்றனர். அதற்கு மீனா, இந்த பணத்தில் முத்துவுக்கு ஒரு கார் வாங்கி தரப்போவதாக சொல்கிறார். பின் முத்துவும் மீனாவும் வீட்டுக்கு வருகின்றனர். மாலை வண்டி கிடைத்து விட்டதாக முத்து மகிழ்ச்சியாக சொல்கிறார்.  பின் அண்ணாமலை அவர்கள் இருவரையும் ஆசீர்வாதம் செய்கிறார். 


”ஆனா ஒன்னு ரோகினி உன் அளவுக்கு இந்த வீட்ல யாரும் எனக்கு மரியாதை கொடுக்குறது இல்லை” என விஜயா சொல்கிறார். ”மாசா மாசம் நீ எனக்கு பாக்கெட் மணி கொடுக்குற, இது தான் நல்ல குணம்ங்கறது. ஆனா இங்கேயும் சில பேர் இருக்காங்களே, நல்லா சம்பாதிச்சி எல்லாத்தையும் தான் வயித்துலயே கொட்டிக்குறாங்க” என்கிறார் விஜயா. 


மீனா, விஜயாவிடம் வந்து, “சாம்பார் அடுப்புல இருக்கு அது கொதிச்ச உடனே ஆஃப் பண்ணி இறக்கி வச்சிடுறிங்களா நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வறேன்” என சொல்லி விட்டு மீனா செல்கிறார். ”தான் மட்டும் தான் நல்லா இருக்கனும்ங்றது அவ நெனப்பு’ என்கிறார் விஜயா. மீனா செல்வத்தின் கார் ஷெட்டுக்கு சென்று ”அவருக்காக ஒரு கார் வாங்கலாம்னு நெனைக்குறேன் அண்ணா” என்கிறார். 


”செகண்ஸ்ல வாங்கினா கொஞ்சம் கம்மியா ஆகும்” என செல்வம் சொல்கிறார். ”கார் வாங்க காசு வேணும்னா சொல்லுமா நாங்களும் கொஞ்சம் காசு தறோம்” என சொல்கின்றனர். மீனா, செல்வம், கார்த்தி ஆகியோர் கார் ஷோ ரூம் செல்கின்றனர். பின் காரை பார்க்கின்றனர். காரின் விலை மூன்று லட்சம் என ஷோ ரூமில் செல்கின்றனர். முன் பணம் 80 ஆயிரம் கட்ட வேண்டும் என சொல்கின்றனர். தன்னிடம் 60 ஆயிரம் மட்டுமே இருப்பதாகவும், மீதம் 20 ஆயிரம் ரெடி பண்ணி விட்டு சொல்வதாக மீனா சொல்கிறார். 


விஜயா வீட்டின் வெளியே நின்று ஒருவர் அங்கேயும் இங்கேயும் சுத்திப் பார்க்கிறார். ”நீ யாருயா எதுக்கு இங்க நின்னு அங்கேயும் இங்கேயும் சுத்தி பார்த்துக்கிட்டு இருக்க’ என விஜயா அவரிடம் கேட்கிறார். பின் அவர் கடையின் பெயரை பார்த்து விட்டு “பரவாயில்லையே உங்க பேர்லலாம் கூட கடை இருக்கு” என்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.