இன்றைய எபிசோடில், ”சீர் வைக்க உங்க அப்பாவை வர சொல்லு இல்லையென்றால் உங்க மாமாவையாவது வர சொல்” என ரோகினியிடம் சொல்கிறார் விஜயா. ”அவரால முடிஞ்சத செய்யட்டும் இல்லனா உன்னை பார்த்துட்டு போகட்டும். இப்போ முத்து இப்டி பேசினா அவன் நாம் வீட்டு ஆளு வெளி ஆளுங்க யாராவது பேசினா என்ன பன்றது” என்கிறார் விஜயா. அதற்கு ரோகினி, ”சரிங்க ஆண்டி நான் வர சொல்றேன்” என்கிறார். 


ரோகினி இதை தன் தோழி வித்யாவிடம் பகிர்ந்து கொள்கிறார். ரோகினி, ”மீனாவோட அம்மா ஒரு தட்டு சீர் எடுத்துட்டு வந்ததுக்கே என் மாமியார் அவங்கள அவமானப்படுத்துனாங்க. என் நிலைமை எல்லாம்  தெரிஞ்சா அவ்ளோ தான் என்னை வீட்டை விட்டே தொறத்திடுவாங்க” என சொல்கிறார். இந்த பிரச்சனைக்கு ஒரே வழி இப்போ மலேசியாவுல இருந்து ஆள் வரணும் என வித்யா கூறுகிறார். மலேசியாவுல இருந்து வர மாதிரி ஒரு ஆள் செட் பண்ணனும் என வித்யா சொல்கிறார். 


கறிக்கடை வைத்திருக்கும் ஒருவரை ரோகினியும்- வித்யாவும் சென்று சந்திக்கின்றனர். புதுசா வர மணி ரத்னம்-கமல்ஹாசன் படத்துல நடிக்க போறீங்க என்று அந்த கறிக்கடைக்காரரிடம் சொல்கிறார் ரோகினி. அவரிடம் ரோகினிக்கு மாமாவாக நடிக்கனும் என்று சொல்கிறார். முதலில் மறுக்கும் அவர் பின்னர் ஒத்துக்கொள்கிறார். மீனாவின் தம்பிக்கு தெரிந்த பைனான்சியரிம் ரோகினியும்-வித்யாவும் சென்று வட்டிக்கு ஒரு லட்சம் பணம் வாங்குகின்றனர். இதை மறைந்திருந்து மீனாவின் தம்பி பார்த்துக் கொண்டிருக்கிறார். ரோகினியின் மீது மீனாவின் தம்பிக்கு சந்தேகம் வந்து விடுகிறது. 


”இனிமே சீர் வைக்குறேன் மோர் வைக்குறேனு அந்த வீட்டுப்பக்கம் வந்து நிற்காதே” என்று மீனா தன் அம்மாவிடம் சொல்கிறார்.என்கிட்ட முன்னாடியே சொல்லி இருந்தா நான் பணம் ரெடி பண்ணி இருப்பேன் என மீனாவின் தம்பி சொல்கிறார். பிறகு மீனாவிடம் தான் பைனான்சியரிடம் பார்ட் டைம் வேலை பார்ப்பதாக சொல்கிறார் மீனாவின் தம்பி. 


மறுப்பக்கம் ரோகினியும், வித்யாவும் அந்த கறிக்கடைக்காரரிடம் சென்று பிரேஸ்லேட் துணி ஆகியவற்றை கொடுக்கின்றனர். பிரேஸ்லேட்டை மனோஜின் கையில் போட்டு விட வேண்டும் என வித்யா சொல்கிறார். மலேசியாவில் இருந்து தன் மாமா வருவதாக ரோகினி, விஜயாவிடம் சொல்கிறார். விஜயா, அண்ணாமலையிடம் மலேசியாவில் இருந்து ரோகினியின் மாமா வருவதாக சொல்கிறார். ரோகினியின் அப்பா வராதது குறித்து அண்ணாமலை கேட்க, அவர் பிஸியா இருக்கிறார் என விஜயா சொல்கிறார். 


அனைவரும் பாட்டி வீட்டுக்கு செல்ல மும்முரமாக கிளம்பிக்கொண்டிருக்கின்றனர். அப்போது மாமா எப்போ வரார் என ரோகினியிடம் கேட்கின்றனர். அப்போது ரோகினி மாமா பஸ் ஏறிவிட்டதாக கூறுகிறார். வீட்டில் அனைவரும் அதிர்ச்சியாக ரோகினியை பார்க்கின்றனர். பின் ரோகினி எதையோ சொல்லி சமாளிக்கிறார். பின் அனைவரும் குடும்பத்துடன் காரில் புறப்பட்டு பாட்டி வீட்டுக்குச் செல்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.