சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் ஜனனியின் தங்கை அஞ்சனா தன்னுடைய காதல் விஷயத்தை பற்றி பார்வதியிடம் சொன்னதும் அவள் கோபப்பட்டு அஞ்சனாவை அடிக்கிறார். ஜனனி அம்மாவை சமாதானம் செய்துவிட்டு அஞ்சனா விரும்பும் அந்த பையனிடம் நடந்ததை பற்றி சொல்கிறாள். அந்த பையன் மிகவும் தெளிவாக நான் என்னுடைய வீட்டில் சம்மதம் வாங்கிய பிறகு தான் கல்யாணம் செய்து கொள்வேன் என சொல்கிறான். பார்வதி இனி அனைத்து முடிவுகளையும் ஜனனியிடம் ஒப்படைகிறாள்.
தர்ஷினியை விரும்புவதாகச் சொல்லி ஒரு பையனை டிராமா போட தர்ஷினி அழைத்து வந்த பையன் வீட்டுக்கு சென்ற குணசேகரன் அவனை மிரட்டுகிறார். "ஏய்! என்னோட மகளை காணோம். நீ தான் எங்கேயோ வைச்சு இருக்க" என மிரட்ட அந்த பையன் சொன்னதை கேட்டு குணசேகரன், கதிர் மற்றும் ஞானம் அதிர்ச்சி அடைகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.