✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Ethirneechal: தர்ஷினியை காணவில்லை... பதட்டத்தில் ஈஸ்வரி... குணசேகரன் செய்த அடாவடித்தனம்... எதிர்நீச்சலில் இன்று

லாவண்யா யுவராஜ்   |  18 Jan 2024 02:18 PM (IST)

Ethirneechal : தர்ஷினியை காணவில்லை என அனைவரும் பதட்டமாக இருக்க குணசேகரன் செய்த காரியம் என்ன தெரியுமா? எதிர்நீச்சலில் தொடரும் பரபரப்பு...

எதிர்நீச்சல் ஜனவரி 18 ப்ரோமோ

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் ஜனனியின் தங்கை அஞ்சனா தன்னுடைய காதல் விஷயத்தை பற்றி பார்வதியிடம் சொன்னதும் அவள் கோபப்பட்டு அஞ்சனாவை அடிக்கிறார். ஜனனி அம்மாவை சமாதானம் செய்துவிட்டு அஞ்சனா விரும்பும் அந்த பையனிடம் நடந்ததை பற்றி சொல்கிறாள். அந்த பையன் மிகவும் தெளிவாக நான் என்னுடைய வீட்டில் சம்மதம் வாங்கிய பிறகு தான் கல்யாணம் செய்து கொள்வேன் என சொல்கிறான். பார்வதி இனி அனைத்து முடிவுகளையும் ஜனனியிடம் ஒப்படைகிறாள்.
 
 
அஞ்சனா விரும்பும் அந்த பையன் மெய்யப்பன் குடும்பத்தின் வாரிசு. உமையாள் மகன் மிதுனை தான் அஞ்சனா விரும்புகிறாள். அவன் வீட்டுக்கு சென்றதும் அனைவரும் அவனை வரவேற்கிறார்கள். ராமசாமி, கிருஷ்ணாசாமி, கீர்த்தி மற்றும் மிதுன் மூவருக்கும் ஒரே மேடையில் திருமணம் செய்து வைக்க ஆசைப்படுவதாக சொல்கிறார் அப்பத்தா. பள்ளியில் கோச் பேசியதை நினைத்து தர்ஷினி மிகவும் வருத்தப்பட்டு அழுது கொண்டு இருக்கிறாள். அவளுடைய தோழி வந்து பேசியும் தர்ஷினி எதையுமே காதில் வாங்கி கொள்ளவில்லை. பள்ளியில் இருந்து கிளம்பி விடுகிறாள். ஈஸ்வரியும் நந்தினியும் தர்ஷினியை தேடி பள்ளிக்கு வந்து கோச்சிடம் மன்னிப்பு கேட்கிறார்கள். தர்ஷினி பள்ளியிலிருந்து வெளியே சென்றதை பற்றி தர்ஷினியின் தோழி சொல்ல அதிர்ச்சி அடைந்த ஈஸ்வரி தர்ஷினிக்கு போன் செய்கிறாள் ஆனால் தர்ஷினி போனை எடுக்கவில்லை. தர்ஷினி அழுது கொண்டே செல்வதை பார்த்த மர்ம நபர்கள் அட்ரஸ் கேட்பது போல அவளை கடத்தி சென்று விடுகிறார்கள். ஈஸ்வரி போன் செய்து பார்க்க வேறு ஒருவர் போனை எடுத்து பேசுகிறார். அதை அறிந்த ஈஸ்வரி அதிர்ச்சியில் அவர் சொன்ன இடத்துக்கு செல்ல அங்கே போனும் ஷூவும் கிடந்ததை பார்த்து ஈஸ்வரியும் நந்தினியும் அதிர்ச்சி அடைகிறார்கள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.
 
 
அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. தர்ஷினியை காணவில்லை என்ற தகவலை வீட்டில் இருக்கும் ரேணுகா , குணசேகரனிடம் சென்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அந்த நேரத்தில் கூட "அப்போ என்னோட கல்யாணம்" என கரிகாலன் கேட்க குணசேகரன் அவனை ஓங்கி அறைகிறார்.
 
ஜனனி ரேணுகாவுக்கு போன் செய்து குணசேகரனிடம் கொடுக்க சொல்கிறாள். குணசேகரனிடம் ஈஸ்வரி அழுது கொண்டே ஆவேசமாக பேசுகிறாள். "கண்டதையும் பேசி, என்னோட பிள்ளை மனச நோகடிச்சு அனுப்பிட்டீங்களே. இன்னும் என்ன பாக்கி இருக்கு உங்களுக்கு" என தலையில் அடித்து கொண்டு அழுகிறாள் ஈஸ்வரி.
 
 
தர்ஷினியை விரும்புவதாகச் சொல்லி ஒரு பையனை டிராமா போட தர்ஷினி அழைத்து வந்த பையன் வீட்டுக்கு சென்ற குணசேகரன் அவனை மிரட்டுகிறார். "ஏய்! என்னோட மகளை காணோம். நீ தான் எங்கேயோ வைச்சு இருக்க" என மிரட்ட அந்த பையன் சொன்னதை கேட்டு குணசேகரன், கதிர் மற்றும் ஞானம் அதிர்ச்சி அடைகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.      
Published at: 18 Jan 2024 02:18 PM (IST)
Tags: Ethirneechal Ethirneechal today episode Ethirneechal january 18 promo
  • முகப்பு
  • பொழுதுபோக்கு
  • தொலைக்காட்சி
  • Ethirneechal: தர்ஷினியை காணவில்லை... பதட்டத்தில் ஈஸ்வரி... குணசேகரன் செய்த அடாவடித்தனம்... எதிர்நீச்சலில் இன்று
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.