சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.


வித்யா ரோகிணியிடம் ”ஸ்ருதிக்கு தான் முதலில் பங்ஷன் பண்ண போறாங்களாம். நீ பயப்படாத, அதுக்குள்ள மயில் பாண்டி அவனைக் குடிக்க வச்சிடுவாரு” என்கிறார். ஸ்ருதியின் அம்மா ரோகிணியின் ரூமுக்குள் வந்து ”உனக்கு முதல்ல பங்ஷன் பண்ணலனு உனக்கு எதுவும் வருத்தம் இல்லையே” என கேட்கிறார். ”அப்பா வந்துகிட்டு இருக்காரு ஆண்டி அதனால தான் வெயிட் பண்றோம்” என்கிறார் ரோகிணி. 


பின் ஸ்ருதிக்கு பங்ஷன் நடக்கிறது. ”ஸ்ருதி இவ்வளவு நகை போட்டு இருக்கிறார் என்று மனோஜ் சொல்கிறார். அதற்கு விஜயா இது எல்லாம் உள்ளூர் நகை டா. ரோகிணியோட அப்பா மலேசியாவுல இருந்து வந்து இதை விட அதிகமா நகைப் போட போறாரு பாரு” என  சொல்கிறார். மயில் பாண்டி முத்துவை குடிக்க வைக்க திட்டம் போடுகிறார். 


மனோஜ் ரோகிணியிடம் சென்று அந்த பொண்ணு போட்டுட்டு இருக்குற தாலி 8 பத்து பவுன் இருக்கும்  இல்ல , உங்க அப்பா வரும்போது செயின் வாங்கிட்டு வரேன்னு சொல்லி இருக்காரா?” என கேட்கிறார். அதற்கு ரோகிணி ”தெரியலையே” என பதில் சொல்லிவிட்டு, ”நான் உள்ள போய் ரெடி ஆயிக்கிட்டு இருக்கேன்” என சொல்லி சென்று விடுகிறார். 


பின் ரோகிணிக்கு பங்ஷன் செய்வதற்காக அழைத்து வருகின்றனர். வித்யா, ரோகிணியிடம் ”மயில் பாண்டி முத்துவை குடிக்க வச்சிடுவான் இன்னும் கொஞ்ச நேரத்துல உள்ள வந்து பிரச்சனை பண்ணுவான் பாரு” என  காதில் சொல்கிறார். மயில்பாண்டி முத்துவிடம் பேசி அவரை அழைத்துச் சென்று காருக்குள் இருக்கும் சரக்குகளை காண்பிக்கிறார். முத்து, மயில் பாண்டியிடம் ”என்னண்ணே காருக்குள் ஒரு பாரே வச்சி இருக்க” என கேட்கிறார். 


மயில்பாண்டி முத்துவுக்கு சரக்கை ஊற்றிக் கொடுக்கிறார். முத்துவும் சரக்கை கையில் வாங்கி கொள்கிறார். ஒருவர் ஸ்ருதியின் அப்பாவிடம் வந்து ”உங்களுக்கு பெரிய மனசு தான் உங்க பொண்ணு பங்ஷனோட சேர்த்து அவங்க பெரிய மருமகளுக்கும் பங்ஷன் பண்ண ஒத்துக்கிட்டிங்க” என்கிறார். அதற்கு வாசுதேவன், ”நம்ம சாப்பிட்ட சாப்பாடு மிச்சம் இருந்தா? இல்லாதவங்களுக்கு தருவோம் இல்ல அந்த மாதிரிதான்” என சொல்கிறார். 


அதற்கு பரசு ”பார்த்தியா.. அண்ணாமலை எவ்ளோ மட்டமா பேசுறான் பாரு” என்கிறார். அண்ணாமலை பரவாயில்லை என்கிறார். பின் அண்ணாமலையும் பரசுவும் பின்னால் உட்கார்ந்திருந்த முத்துவை காணவில்லையே என அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.