சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம். 


ஃபேஷியல்:


ரோகிணி தன் அம்மாவை விஜயா பார்க்காமல் இருப்பதற்காக அவருக்கு பேஷியல் செய்து அமர வைத்திருக்கிறார். விஜயா ரோகிணியின் அம்மாவை பார்த்து ”பாவம் இவளுக்கு அம்மா இல்லை. அம்மாவா இருந்து நான் தான் பார்த்துக்குறேன்” என சொல்கிறார். ”நல்ல விஷயம் தாங்க” என ரோகிணியின் அம்மா சொல்கிறார். உடனே விஜயா, ”ரோகிணி அவங்களுக்கு கண்ணுல இருந்து தண்ணி வருது பாரு” என சொல்கிறார். பின் ரோகிணி ”ஆண்டி நீங்க வீட்டுக்கு போங்க நான் உங்களுக்கு வீட்டுக்கு வந்து ஃபேஷியல் செய்து விடுகிறேன்” என்று சொல்லி அவரை வீட்டுக்கு அனுப்பி விடுகிறார். 


ரோகிணியின் அம்மா வருத்தத்துடன் பார்லரில் இருந்து புறப்படுகிறார். பின் அண்ணாமலை தனது குடும்பத்தினருடன் மண்டபத்திற்கு வருகிறார். முத்து சண்டைப் போட கூடாது என்பதற்காக மீனாவிடம் சைகையில் பேசுகிறார். ”ரவி வந்து இவன் ஏன் இப்டி இருக்கான்” என கேட்கிறார். அதற்கு மீனா ”நீங்க போய்ட்டு ரெடி ஆகுங்க தம்பி எல்லோரையும் வரவேற்கணும் இல்ல” என்கிறார்.  அண்ணாமலையின் பக்கத்தின் அமர்ந்திருக்கும் ஒருவர் ஷூ காலுடன் அண்ணாமலையை இடிக்கிறார். இதை பார்த்து ஸ்ருதியின் அப்பா சிரிக்கிறார். ”என்னப்பா அவன் உன்னை ஷூ காலோட இடிக்குறான்” என்கிறார் பரசு. பின் அண்ணாமலை ”வா போலாம்” என அண்ணாமலையை அங்கிருந்து அழைத்துச் செல்கிறார். 


முத்துவை கோபமூட்ட திட்டம்:


விஜயா ரோகிணியிடம் ”உன் அப்பா எப்போ வருவார்” என கேட்கிறார். ”ஏறிட்டாறு இறங்கிட்டாருனு சொல்றியே தவிர கண்ணுல காட்ட மாட்றியே” என விஜயா சொல்கிறார். பின் வித்யாவும் ரோகிணியும் சேர்ந்து முத்துவை கோபமூட்டி சண்டைப் போட வைக்க திட்டம் தீட்டுகின்றனர். மேலும் முத்துவை குடிக்க வைக்க ஒரு ஆளை ரெடி பண்ணி இருப்பதாக வித்யா ரோகிணியிடம் சொல்கிறார். பேசிக்கொண்டு இருக்கும் போதே மனோஜ் வந்து விடுகிறார். ”யாரை பத்தி பேசுறிங்க” என கேட்கிறார். அப்போது வித்யா எதையோ சொல்லி சமாளிக்கின்றார். பின் ஸ்ருதியின் அம்மாவும் அப்பாவும் மேல் மாடியில் இருந்து முத்துவை பார்க்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. 


மேலும் படிக்க