Kizhakku Vaasal, Aug 29: ‘இது வீடா இல்ல சண்டை நடக்குற இடமா?’ .. கிழக்கு வாசல் சீரியலில் இன்றைய அப்டேட் இதோ..!

Kizhakku Vaasal serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கிழக்கு வாசல்’ சீரியலில் இன்றைக்கு ஒளிபரப்பாகவுள்ள காட்சிகள் பற்றி காணலாம்.

Continues below advertisement

Kizhakku Vaasal serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘கிழக்கு வாசல்’ (Kizhakku Vaasal) சீரியலில் இன்றைக்கு (ஆக. 29) ஒளிபரப்பாகவுள்ள காட்சிகள் பற்றி காணலாம்.

Continues below advertisement

கிழக்கு வாசல் சீரியல் 

தனது ராடன் மீடியா நிறுவனத்தின் மூலம் நடிகை ராதிகா  விஜய் டிவியில் ‘கிழக்கு வாசல்’ சீரியலை தயாரித்துள்ளார். இந்த சீரியல் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இயக்குனர் எஸ் .ஏ.சந்திரசேகர், நடிகைகள் ரேஷ்மா முரளிதரன்,தாரிணி, நடிகர்கள் ஆனந்தபாபு, வெங்கட் ரங்கநாதன், அருண் குமார் ராஜன், ரோஜா ஸ்ரீ, கிரண் மாயி, அஸ்வினி ராதா கிருஷ்ணா, கீதா நாராயணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த சீரியல் தினமும் இரவு 10 மணிக்கு விறுவிறுப்பாக  ஒளிபரப்பாகி வருகிறது.

இன்றைய எபிசோட் அப்டேட்

தன்னுடைய சர்ட்டிஃபிகேட் அடக்கிய ஹேண்ட் பேக்கை திருடர்கள் பறித்து செல்ல அவரை துரத்திக் கொண்டு ரேணு ஓடுகிறாள். இதனை எதேச்சையாக பார்க்கும் ஷண்முகம் திருடர்களிடம் இருந்து பேக்கை பறிக்க,ரேணு நிம்மதியடைகிறாள். "ஏன் நடந்து வர்ற?, இப்படி சர்ட்டிஃபிகேட் தொலைஞ்சு போனா எல்லாம் போயிருக்கும்" என அவளை ஷண்முகம் சத்தம் போடுகிறார். இதனைத் தொடர்ந்து வீட்டில் நடேசனிடம், பார்வதி சாமியப்பன் வேலைக்கு செல்லும் விஷயத்தை தெரிவிக்க, அவனோ வீட்டுல சும்மா இருக்குறது போகுறது தப்பில்ல என எகத்தாளமாக கூறுகிறான். 

நடேசனின் கருத்துக்கு மாயாவும் சப்போர்ட் செய்கிறாள். இதனைக் கேட்டுக் கொண்டே வீட்டுக்குள் வரும் சாமியப்பன், ரேணுவை தன்னால் படிக்க வைக்க முடியும் என உறுதியாக நம்புகிறார். அப்போது அங்கு வரும் ரேணு சர்ட்டிஃபிகேட்டை காட்டி சாமியப்பன், சிவகாமியிடம் ஆசி பெறுகிறாள். அப்பா வேலைக்கு போறது தனக்கு பிடிக்கவில்லை என மாணிக்கம் தெரிவிக்கின்றான். நானும் ரேணு படிப்புக்கு உதவுவதாக கூற அதனைக் கேட்டு மாயா டென்ஷனாகிறாள். அனைவர் முன்னிலையிலும் சரமாரியாக திட்டுகிறாள். 

பின்னர் மாயா ரேணுவை அழைத்து "எல்லா பிரச்சினையும் உன்னால் தான். உன்னை படிக்க வைக்க சொல்லி நடேசனுக்கும், சாமியப்பனுக்கும் இடையில் சண்டை" என நடப்பதை எல்லாம் தெரிவிக்கிறார். இதனைத் தொடர்ந்து இரவெல்லாம் தூங்காமல் யோசித்து கொண்டிருக்கிறார். பொழுது விடிந்தது. ரேணுவை காணவில்லை என பார்வதி தெரிவிக்க சாமியப்பன் டென்ஷனாகிறார். எங்கே போயிருப்பாள் என தெரியாமல் அனைவரும் குழம்பி போகின்றனர். ஷண்முகம் நைட் ரொம்ப நேரம் அவளோட ரூமில் லைட் எரிந்ததாக கூற, உடனே அனைவரும் பதற்றமடைகின்றனர். இதனோடு இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola