சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் தொடரின் நேற்றைய எபிசோடில் நந்தினி குணசேகரன் அவளை அடிக்க கை ஓங்கியதை பற்றியும் அசிங்கமாக பேசியது பற்றி சொன்னதும் கதிர் கோபப்பட்டு குணசேகரனிடம் சென்று "அவளை என்ன சொன்னீங்க... அடிக்க போனீங்களா... பேசுறத கேட்டு கழுத்தை நெருச்சி கொன்னுருக்க வேண்டாம். பேசவிட்டு வேடிக்கை பாத்தீங்களா" என கேட்டதும் அனைவரும் தலையில் அடித்து கொள்கிறார்கள்.
கதிர் குணசேகரனிடம் கிள்ளிவளவனை பயங்கரமாக திட்டி கொண்டு இருக்கிறான். "ஜீவானந்தம் குடும்பத்தை நானே போட்டு தள்ளி இருப்பேன். இந்த கிழட்டு பய தான் என்னை இழுத்துட்டு வந்துட்டான்" என்கிறான் கதிர். அப்பத்தாவிடம் ஜீவானந்தத்திற்கு எதிராக கையெழுத்து வாங்கி அரெஸ்ட் வாரண்ட் கூட வாங்கியாச்சு. "முடியாது அண்ணன். அந்த தாடிகாரனை நான் என் கையாள கொல்லனும்" என்கிறான் கதிர். "இந்த வீட்டு பொம்பிளைகளை சும்மா விடக்கூடாது அடக்கி வைக்கணும்" என்கிறார் குணசேகரன்.
"அங்க ஜீவானந்தம் மனைவியை என் கண்ணு முன்னாடியே சுட்டுட்டாங்க அக்கா" என சொல்லி நடந்த அனைத்தையும் சொல்கிறாள் ஜனனி. "என் கண்ணு முன்னாடியே ஒரு உயிர் போயிடுச்சு. என்னால எதுவும் செய்யமுடியல. அந்த குழந்தை அழுதது என்னோட காதுக்குள்ள கேட்டுகிட்டே இருக்கு. அந்த வெண்பா பாவம்" என சொல்கிறாள் ஜனனி. "யாரு சுட்டது என தெரியல. வெண்பாவை நான் பாத்துக்குறேன் நீ போன்னு என்ன அனுப்பிட்டாரு அக்கா. அவருக்கு இப்படி ஒரு பக்கம் இருக்கும்னு எனக்கு தெரியல. அவரோட அழகான குடும்பத்தை தன்னோட சமூக போராட்டம் பாதிச்சிட கூடாதுன்னு குடும்பத்தை வெளியுலகத்தை கட்டாமலேயே வைச்சு இருக்காரு. இரண்டு மூணு மாசத்துக்கு ஒரு முறை தான் ஊருக்கு போய் குடும்பத்தை பாப்பராம். பாலோ செய்து சுட்டு கொன்னுட்டாங்க" என ஜனனி சொல்லி அழுததும் ஈஸ்வரியால் அதை தாங்கிக்கொள்ள முடியாமல் அழுகிறாள்.