பிக் பாஸ் தமிழ் 7-வது சீசனில் மொத்தம் 23 பேர் களம் இறங்கினர்.  இந்த சீசன் வழக்கம் போல் ரசிகர்கள் மத்தியில் அதிக ரீச்சை பெற்றது. இந்த சீசனை விறுவிறுப்பாக மாற்றியதில், மாயா மற்றும் பூர்ணிமாவின் பங்கு மிகப்பெரியது. இன்று கிராண்ட் ஃபைனல் நடைபெற உள்ளது. ஃபைனலிஸ்ட்டாக  தினேஷ், மணி சந்திரா, மாயா, வி.ஜே.அர்ச்சனா மற்றும் விஷ்ணு விஜய் உள்ளிட்ட முதல் 5 இறுதிப் போட்டியாளர்களுக்கு இடையேயான போட்டியாக இருக்கிறது.


டைட்டில் வின்னர்:


பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில், ரித்விகா டைட்டில் வின்னராக தேர்வு செய்ய பட்டதற்கு பின்னர், கடந்த 4 சீசன்களாக,  பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து ஆண் போட்டியாளர்களே டைட்டிலை தட்டிச் சென்றனர்.  எனவே இந்த முறையாவது, பெண் போட்டியாளர் யாரேனும் டைட்டிலை தட்டிச் செல்வாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. குறிப்பாக அர்ச்சனா டைட்டிலை வெல்வார் என்று ஒருபக்கமும், மாயா தான் டைட்டிலை வெல்வார் என மேலும் சில ரசிகர்களும் கூறி வந்தனர்.
 
இந்நிலையில் வைல்ட் கார்டு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த அர்ச்சனா மற்றும் தினேஷ் பைனலுக்கு முன்னேரினர். வாக்கு எண்ணிக்கையை வைத்து யார் வின்னர் என்பதை ரசிகர்கள் ஓரளவு சரியாக கணித்து விடுகின்றனர். இந்நிலையில் அர்ச்சனா தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வந்தார். அதன்படி அர்ச்சனா தான் டைட்டிலை வென்றதாக கூறப்படுகிறது.


பட்டத்தை கைப்பற்றிய அர்ச்சனா:


அர்ச்சனா வாக்கு எண்ணிக்கையில் முதல் இடத்தில் இருந்தாலும், பிக்பாஸ் டீம் மாயாவையே வின்னராக தேர்வு செய்வார்கள் என கூறப்பட்டு வந்தது. பல யூடியூப் சேனல்களும் கூட இது குறித்து வீடியோ வெளியிட்டன. இந்நிலையில்  அர்ச்சனா பிக்பாஸ் டைட்டிலை வென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வைல்ட் கார்டில் உள்ளே வந்து டைட்டிலை தட்டி சென்ற முதல் போட்டியாளரும் அர்ச்சனா தான். மேலும் இவருடைய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி தீயாக பரவி வருகிறது.





பிக் பாஸ் தமிழ் 7 வெற்றியாளருக்கு அவர்களின் மொத்த ஊதியத்துடன் சேர்த்து 50 லட்சம் ரூபாய் கிடைக்கும் என கூறப்படுகிறது. பிக் பாஸ் தமிழ் 6 வெற்றியாளருக்கும் ரொக்கப் பரிசுடன் புத்தம் புதிய கார் கிடைத்தது. இந்த முறை வெற்றி பெற்றவருக்கு G Square ரூ.15 லட்சம் மதிப்பிலான மனை ஒன்றை வின்னருக்கு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.