விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் பாக்கியாவை ஜெனி வீட்டுக்கு போவதற்காக ஈஸ்வரி அழைக்க பாக்கியா செல்ல மறுக்கிறாள். ஆனால் விடாப்பிடியாக "நான் போக போகிறேன் நீ என்னுடன் வந்து தான் ஆக வேண்டும்" என வற்புறுத்துகிறார் ஈஸ்வரி. ராமமூர்த்தியும் பாக்கியாவை ஈஸ்வரியுடன் சென்று வர சொல்கிறார். "நாம அப்படியே விட்டுட்டோம் என ஜெனி நினைக்க கூடாது இல்ல" என பாக்கியாவை சமாதானம் செய்து அனுப்பி வைக்கிறார்.
ஈஸ்வரி, பாக்கியா அதிர்ச்சி:
ஜெனி வீட்டுக்கு ஈஸ்வரியும் பாக்கியாவும் செல்கிறார்கள். குழந்தை தூங்கிறது என சொல்லி ஈஸ்வரியை பார்க்க அனுமதிக்கவில்லை. "பொண்ணு கோபத்தில் வீட்டுக்கு வந்தா அவளுக்கு நல்லது சொல்லி அனுப்பி வைக்கணும்" என ஜெனி அம்மாவிடம் ஈஸ்வரி சொல்ல ஜெனி அம்மா டென்ஷனாகிறார். "நடந்தது ஒன்னு சொல்ற அளவுக்கு நல்ல விஷயம் கிடையாது" என பாக்கியா ஜெனியிடம் பேச கோபத்தில் இருந்த ஜெனி "நீங்க இனிமே என்ன சொன்னாலும் நான் கேக்கபோறது இல்ல.
எப்படி நீங்க என்ன அங்க கூப்பிட வந்து இருக்கீங்க. நான் எல்லா விஷயத்திலேயும் உங்களுக்கு சப்போர்ட்டா இருந்து இருக்கேன். இனியாவுக்கு இது மாதிரி நடந்து இருந்தா இப்படி தான் அந்த பையனுக்கு சப்போர்ட்டா பேசுவீங்களா?" என ஜெனி கேட்க ஈஸ்வரியும் பாக்கியாவும் அதிர்ச்சி அடைகிறார்கள். பாக்கியா ஈஸ்வரியை அழைத்து கொண்டு வீட்டுக்கு வந்து விடுகிறாள்.