சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் முந்தைய எபிசோடில் அப்பத்தா நடத்திய விழாவில் ஏற்பட்ட கலவரத்திற்கு மொத்த காரணமும் வீட்டில் இருக்கும் பெண்களதான் என விசாலாட்சி அம்மா அவர்களை திட்டி தீர்க்கிறார். மறுபக்கம் அப்பத்தா பேச்சு மூச்சு இல்லாமல் மயக்கமாக படுத்திருக்கிறார். 



அப்பத்தா மயக்கமாக பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கவும் வீட்டில் உள்ள அனைவரும் பதற்றமடைகிறார்கள். அவரை வேகவேகமாக தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள். ஜனனிதான் அனைத்திற்கும் காரணம் என அவள் மீது பழி போடுகிறார் குணசேகரன். அனைவரையும் தள்ளிவிட்டு கதிர், குணசேகரன் மற்றும் கதிர் மூவரும் அப்பத்தாவை காரில் அழைத்து செல்கிறார்கள். மொத்த குடும்பமும் அப்பத்தாவிற்கு என்ன ஆனது என பதற்றமாக இருக்கிறார்கள். அத்துடன் முந்தைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவடைந்தது. 


இந்த நிலையில் தற்போது இன்றைய (நவம்பர் 13) எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. 


காரில் அப்பத்தாவை அழைத்து செல்லும் போது கதிரும் கரிகாலனும் எழுப்பி பார்க்கிறார்கள். ஆனால் அப்பத்தா கண் விழிக்கவே இல்லை. சக்தியை அழைத்து கொண்டு பெண்கள் அனைவரும் அப்பத்தாவை எங்கு அழைத்து சென்றார்கள் என பார்ப்பதற்காக பின் தொடர்கிறார்கள். ஆனால் குணசேகரன் சென்ற காரை அவர்களால் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. 


 



சக்தியும் ஜனனியும் சென்று ஒவ்வொரு மருத்துவமனையாக தேடி பார்க்கிறார்கள். ஆனால் அங்கு எங்கும் அப்பத்தாவை அழைத்து வரவே இல்லை என தெரியவர பதற்றமான ஜனனி "எங்கேயும் அட்மிட் பண்ணலயாம் அக்கா. இவங்க ஏதோ கேம் ஆடுறாங்க அக்கா" என் பதற்றத்துடன் ஜனனி சொல்ல ஈஸ்வரி, ரேணுகா மற்றும் நந்தினி அதிர்ச்சி அடைகிறார்கள். 



ஈஸ்வரி சக்தியிடம் "உங்க அண்ணனுக்கு போன் அடி" என சக்தியிடம் சொல்கிறாள். அதற்குள் ஈஸ்வரிக்கு ஜீவானந்தம் போன் செய்கிறார். "நான் சொல்றதை கொஞ்சம் கவனமா கேட்டுக்கங்க. அப்பத்தாவோட உயிருக்கு பெரிய ஆபத்து இருக்கு" என எச்சரிக்கிறார் ஜீவானந்தம். 


சக்தி ஞானத்திற்கு போன் செய்து பேசுகிறான். ஞானத்திடம் "எங்க அண்ணன் இருக்க நீ?" என கேட்கிறான் சக்தி. "எல்லாரும் கிளம்பி முதல வீட்டுக்கு வாங்க" என ஞானம் சொல்ல "முதல அப்பத்தா எங்கன்னு சொல்லு" என சக்தி கேட்க ஞானம் போனை வைத்து விடுகிறான். சக்தி ஏதோ சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். 


இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட். 


 



அப்பத்தாவுக்கு என்ன நடந்தது இருக்கும். அவரின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து இருக்கிறதா? அவராகவே ஏதாவது தவறான முடிவை எடுத்துக்கொண்டார்? இப்படி அப்பத்தாவுக்கு என்ன நடந்து இருக்கக்கூடும் என அனைவரும் பதற்றமாக இருக்க அதே பதற்றம் ரசிகர்களும் தொற்றிக்கொள்கிறது.