விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோடில் இனியாவும் , பாக்கியாவும் காலேஜ் வந்து இறங்குகிறார்கள். எவ்வளவு பெரிய காலேஜ் என பார்த்து ஆச்சரியப்படுகிறாள் பாக்கியா. இனியவாவை வலது கால் எடுத்து வைத்து காலேஜுக்குள் அழைத்து சென்று அங்கு இருக்கும் விநாயகரை வணங்கி விட்டு உள்ளே செல்கிறார்கள். 


பாக்கியா அங்கு இருக்கும் மாணவர்கள், டீச்சர் என அனைவரையும் ஆச்சரியமாக பார்க்கிறாள். "அவங்க உன்னோட டீச்சரா அவங்க கிட்ட  நான் போய் பேசட்டுமா" என ஆசிரியையை பார்த்து கேட்கிறாள் பாக்கியா. அம்மா இங்கே சார், மேடம், புரோஃபசர்  அப்படினு தான் சொல்லணும் என்கிறாள் இனியா. பாக்கியாவும், இனியாவும் ஆபிஸ் ரூம் செல்கிறார்கள். அப்ளிகேஷன் பார்மை நான் தான் ஃபில் பண்ணுவேன் என சொல்லி பாக்கியா நிரப்புகிறாள். பிறகு மொத்த பணத்தையும் கட்டி கல்லூரி பிரின்ஸ்சிபாலை பார்ப்பதற்காக வெளியில் காத்திருக்கிறார்கள். 


 



கோபி தனது நண்பரை நேரில் வர சொல்லி அவனிடம் இனியாவை காலேஜில் சேர்க்க வேண்டும் அதற்கு 50 ஆயிரம் தேவைப்படுது என ஹெல்ப் கேட்கிறார். நண்பனும் பணத்தை அனுப்பி விடுகிறான். ஆனால் பண விஷயத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இரு என கோபிக்கு அட்வைஸ் செய்கிறார். 


காலேஜ் வந்த கோபி,  "இனியா சாரி டா டிடி எடுக்க கொஞ்சம் நேரமாயிடுச்சு, வா பீஸ் கட்டலாம்" என கூப்பிடுகிறார். "இல்ல டாடி பணம் கட்டியாச்சு" என்கிறாள் இனியா. "யாரு தாத்தா வந்தாரா"" என கேட்கிறார். இல்லை  அம்மா தான் கட்டுனாங்க". "முழுசா கட்டியாச்சா.. அவ எப்படி கட்டலாம்" என வாக்குவாதம் செய்கிறார். இனியா எனக்கும் பொண்ணு தான் என சொல்லி கோபி நோஸ் கட் கொடுக்கிறாள் பாக்கியா. இனியா உடனே "ப்ளீஸ் சண்டை வேண்டாம். உங்ககிட்ட நிறைய பணம் இருந்தா என்கிட்ட கொடுங்க நான் ஜாலியா செலவு செய்றேன்" என்கிறாள். 


 



பிரின்ஸ்பால் பார்க்க உள்ளே செல்லும் போது பாக்கியாவை நிறுத்தி கோபி, "நீ ஒன்னும் வர தேவையில்லை. அங்க வந்து அவங்க கேக்குற கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் மானத்தை வாங்கி குழந்தையையும் அவமானப்படுத்திடுவ" என அசிங்க படுத்துகிறார் கோபி. பிளாஷ் பேக்கில் முதல் நாள் இரவு எழில் மற்றும் ஜென்னியிடம் பிரின்ஸ்பாலை சந்திக்கும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என ட்ரைனிங் எடுத்து கொண்ட காட்சிகள் பாக்கியா கண்முன்னே வருகிறது. கோபி கதவை திறப்பதற்குள் பாக்கியா எக்ஸ்கியூஸ் மேடம்  மே ஐ கம் இன் என கேட்டு உள்ளே நுழைகிறாள். உள்ளே சென்றதும் பிரின்ஸ்பால் கேட்ட அனைத்து கேள்விகளுக்கு டான் டான் என இங்கிலீஷில் பிச்சு உதறுகிறார் பாக்கியா. எங்களுடைய ஆசையை காட்டிலும் அவளுடைய விருப்பம் தான் முக்கியம் என பிரின்ஸ்பாலிடம்  சொல்கிறாள். அவள் தயக்கமின்றி போல்டக இங்கிலீஷில் பேசியதை பார்த்து ஷாக்காகிறார் கோபி. இனியாவிடம் இது உங்க அம்மா தானா இல்லை வேற யாராவது வெளியில் இருந்து டப்பிங் கொடுக்குறாங்களா என கேட்கிறார். இல்ல டாடி அம்மா தான் என இனியா சொன்னதும் கிள்ளி பார்த்து கொள்கிறார். கெத்தாக வெளியில் இனியாவை அழைத்து வருகிறாள் பாக்கியா. அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.