Ethirneechal : கதிருக்கு லாடம் கட்டிய கெளதம்... சக்தியை பார்த்து மிரண்ட ஜான்சி... எதிர்நீச்சலில் நேற்று..

Ethirneechal Oct 30 : கதிரை கட்டி வைத்து அடிக்கிறான் கெளதம். அவனை காணாமல் டென்ஷனாக இருக்கிறார்கள் வளவனும் கரிகாலனும். ஜான்சியை மிரட்டி ஓடவிட்டு சக்தி. இன்றைய (அக்டோபர் 30) எதிர்நீச்சல் ப்ரோமோ

Continues below advertisement

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் போன வார எபிசோடுகளில் அனைவரும் கிளம்பி திருவிழாவுக்கும் அப்பத்தா நடத்த போகும் பங்ஷனில் கலந்து கொள்வதற்காகவும் ஊருக்கு செல்கிறார்கள். கதிர், கரிகாலன் மற்றும் வளவன் தனியாக இரண்டு நாட்கள் முன்னரே கிளம்பினர். ஆனால் வரும் வழியில் கதிருக்கு ஒரு பெண்ணிடம் இருந்து போன் வரவே அவன் புத்தி மாறி வளவனையும் கரிகாலனையும் கழட்டி விட்டு அந்த பெண் இருக்கும் ஊருக்கு அவளை தேடி சென்றுவிட்டான். சென்ற இடத்தில் வசமாக கௌதமிடம் சிக்கி கொண்டான்.

ஊரில் திருவிழா ஏற்பாடுகள் பலமாக நடைபெற குணசேகரனும் ஊரில் வந்து இறங்கி விட்டார். இந்த வாரம் முழுவதும் ஒரே பரபரப்பாக இருக்க போகிறது. அந்த வகையில் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Continues below advertisement



கதிரை கட்டி வைத்து சரியான காட்டு காட்டுகிறான் கெளதம். ஜீவானந்தம் மனைவியை கொன்றது கதிரும், குணசேகரனும் தான் என்பதை உளவாளி மூலம் அறிந்து கொண்டு பக்காவாக பிளான் செய்து கதிர் வீக்னஸ் பாயிண்டை வைத்தே அவனை வசமாக வலையில் சிக்க வைத்துவிட்டான் கெளதம்.

வழக்கம் போல ஜான்சி ராணி தன்னுடைய வேலையை தொடங்கி விட்டாள். வீட்டு பெண்கள் அனைவரும் உட்கார்ந்து சமையலுக்கான காய்கறிகளை வெட்டி கொண்டு இருக்கும் போது வீணாக அங்கே வந்து வம்பிழுத்த ஜான்சி ராணியை சக்தி பிடித்து தள்ளி "மரியாதையா சொல்றேன்... முதல இங்க இருந்து கிளம்பு. என்னை பத்தி உனக்கு தெரியாது. செஞ்சுவிட்டு போய்கிட்டே இருப்பேன்" என ஜான்சி ராணியை மிரட்டுகிறான். ஆத்திரம் தாங்காமல் அனைவரையும் பார்த்து முறைக்கிறாள் ஜான்சி.



கரிகாலனும் வளவனும் கதிருக்காக காத்திருக்கிறார்கள். "போன் வந்ததும் பொம்பளை கிட்ட பேசுனான். அதை கூட கண்டுபிடிக்க தெரியல" என கரிகாலன் நலனை பார்த்து கேட்க கோபமான வளவன் "குணசேகரன் கிட்ட நான் பேசிக்கிறேன் டா" என கத்துகிறார். வளவன் ஏதோ சொல்ல அதை கேட்டு கரிகாலன் பயந்துவிடுகிறான்.



ஈஸ்வரியின் அப்பா அப்பத்தாவிடம் வந்து "இந்த வீட்டு பொம்பளைங்க ஆச்சரியப்படுற மாதிரி ஒரு விஷயம் இருக்குன்னு சொன்னாங்க. அது என்னன்னு தான் எனக்கு புரியவே இல்லை" என அவர் சொல்ல அப்பத்தா சிரித்து கொள்கிறார். ஆனால் நந்தினி, ஈஸ்வரி என அனைவருக்கும் சந்தேகமாக இருக்கிறது. இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal)  எபிசோடுக்கான ஹிண்ட்.

Continues below advertisement
Sponsored Links by Taboola