சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (அக்டோபர் 25) எபிசோடில் ஆதி குணசேகரனாக புதிதாக என்ட்ரி கொடுத்த நடிகர் வேல ராமமூர்த்தி இரண்டு மூன்று எபிசோடுகளில் மட்டும் தலையைக் காட்டிவிட்டு பிறகு ஜெயிலுக்கு போய்விட்டார் எனக் கூறி கதைக்களத்தை வேறு விதமாக திருப்பி நகர்த்தி வந்தார்கள்.
அவ்வளவு தான் வேல ராமமூர்த்தி எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகினார் என பல வதந்திகள் பரவி வந்த நிலையில் மீண்டும் நேற்றைய எபிசோடில் ஜெயிலில் இருந்து திரும்பி வந்து விட்டதாக சொல்லி என்ட்ரி கொடுத்தார்.
கதிர் வளவனிடம் வண்டியை சக்கரைப்பட்டி பக்கமாக திருப்ப வேண்டும் என ஆர்டர் போடுகிறான். வளவன் கதிரைப் பார்த்து "நீ தேவையில்லாத வேலையெல்லாம் பாத்துகிட்டு இருக்க" என சொல்ல, "எது தேவையான வேலை எது தேவையில்லாத வேலை என எனக்கு தெரியும். நான் சொன்னதை மட்டும் செய்" என மிரட்டுகிறான். வளவனும் எதுவும் பேச முடியாமல் அமைதியாகி விடுகிறார்.
வீட்டில் நந்தினியின் அப்பா குணசேகரனிடம் "அப்பத்தா வர சொன்னாங்க அது தான்" என சொல்ல, "அவங்க வர சொன்னா வந்துருவீங்களா? வாங்க வாங்க அங்க என்ன நடக்குதுன்னு நீங்களும் பாக்கணும்ல" என சொல்லி அசிங்கபடுத்துகிறார். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.