சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (அக்டோபர் 24) எபிசோடில் கரிகாலனை வளவனும் கதிரும் ஏமாற்றுகிறார்கள் என்பது கூட  தெரியாமல் பயப்படுகிறான். பிறகு உண்மையை தெரிந்து கொண்ட கரிகாலன் வளவனை கிண்டல் செய்ய அவர் துப்பாக்கியை எடுத்து சுட்டுவிடுவேன் என மிரட்டுகிறார். 


ஈஸ்வரி ஜீவானந்தம் பேசியதையே நினைத்து வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறாள். மனசு கேட்காமல் ஈஸ்வரி திரும்ப திரும்ப ஜீவானந்தத்திற்கு போன் செய்கிறாள். போனை எடுத்து ஜீவானந்தம் திட்டி வைத்து விடுகிறார். "வெண்பா என்னோடு இருக்கட்டும். நான் பார்த்து கொள்கிறேன்" என ஈஸ்வரி சொல்ல "வெண்பா மீது நீங்கள் காட்டிய அக்கறையும் அன்புக்கும் நன்றி. இனி போன் செய்யாதீங்க" என சொல்லி வைத்து விடுகிறார் ஜீவானந்தம். 


 



அப்போது நந்தினி அங்கே வந்து "வாங்க நாம எல்லாரும் கிளம்பலாம்" என சொல்கிறாள். அனைவரும் ஜான்சி ராணியை விட்டுவிட்டு எப்படி போக முடியும். அதை வைத்து விசாலாட்சி அம்மா தேவையில்லாமல் ஏதாவது பிரச்சினை செய்வார் என சொல்கிறார்கள். அப்போதும் நந்தினி கேட்காமல் "கொஞ்ச நேரமாவது நாம நிம்மதியா போகலாம்" என சொல்கிறாள். பிறகு ஜான்சி ராணியை அங்கேயே விட்டுவிட்டு கிளம்புகிறார்கள். கார் பின்னாடியே தலைதெறிக்க ஜான்சி ராணி ஓடிவருகிறாள். காரில் நந்தினியும், ரேணுகாவும் கிண்டல் செய்து கொண்டே செல்கிறர்கள். 



கரிகாலன் வளவனிடமும், கதிரிடமும் "எப்படி அப்பத்தாவையும், ஜீவானந்தத்தையும் போட்டு தள்ள போறீங்க என ஏதாவது பிளான் இருக்கா?" என கேட்கிறான். வளவன் அவனது சந்தேகத்தை தீர்த்து வைக்கிறார். "நான் அவங்க இரெண்டு பேரையும் சுட்டு தள்ளுவேன்" என சவால் விடுகிறான் கதிர். 


 



ஜான்சி ராணி ஒரு பைக்கை நிறுத்தி "என்னோட காசை திருடி கொண்டு காரில் ஓடிட்டாங்க" என சொல்லி பின்னாடியே விரட்டி கொண்டு செல்கிறாள். காரை ஒரு வழியாக பார்த்துவிடுகிறாள் ஜான்சி. ஆதிரை அதை பார்த்து மற்றவர்களிடம் சொல்ல நந்தினி சக்தியை வேகமாக காரை ஓட்ட சொல்கிறாள். வழியில் வண்டி வந்ததால் சக்தியை காரை நிறுத்திவிட ஜான்சி ராணி வந்து வண்டியில் ஏறிக்கொள்கிறாள். 


அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் முடிவுக்கு வந்தது.