சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் இதுவரையில் திருவிழாவுக்குக்காகவும் அப்பத்தா நடத்தப்போகும் பங்ஷனில் கலந்து கொள்வதற்காகவும் குணசேகரன் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் அப்பத்தாவின் பூர்வீக வீட்டுக்கு வந்துள்ளார்கள். ஃபர்ஹானா வெண்பாவை அழைத்து வந்து ஈஸ்வரியிடம் விடுகிறாள். வெண்பாவை ரூம் உள்ளேயே பதுக்கி வைத்து இருக்கிறார்கள் ஈஸ்வரியும் மற்ற பெண்களும். அதை பார்த்து விட்ட ஜான்சி ராணி ஈஸ்வரியின் பின்னாலேயே மோப்பம் பிடித்து கொண்டு திரிகிறாள். 


வளவனுடன் பேசி ஜீவானந்தத்தையும் அப்பத்தாவையும் போட்டுத் தள்ள மிகவும் தீவிரமாக பிளான் செய்து கொண்டு இருக்கிறார்கள் கதிரும் குணசேகரனும். அவர்கள் பேசிக்கொண்டு இருப்பதை நந்தினி பார்த்துவிடுகிறாள். 


 



அனைவரும் திருவிழாவுக்கு கிளம்ப தயாராக, வெண்பாவை எங்கே விட்டுச் செல்வது என குழப்பத்தில் இருக்கிறார்கள். அப்பத்தா திருவிழாவுக்கு வரமுடியாது என சொல்ல, குணசேகரனும் கதிரும் அப்பத்தாவை வலுக்கட்டாயமாக வந்தாக வேண்டும் என வற்புறுத்துகிறார்கள். அப்பத்தாவுக்கு அவர்கள் மீது சந்தேகம் வந்துவிடுகிறது. அதனால் நான் திருவிழாவுக்கு வரவில்லை என சொல்லிவிடுகிறார். விசாலாட்சி அம்மா தனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் கோயிலுக்கு வரவில்லை என சொல்லிவிடுகிறார். இது தான் கடந்த வாரம் வரை ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின் நிலை!


அதன் தொடர்ச்சியாக இன்றைய (நவம்பர் 6) எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 


 



திருவிழாவுக்கு குணசேகரனுடன் செல்வதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக நந்தினி ஏதோ பிளான் செய்து தனது தலைமுடியை அவிழ்த்துக் கொண்டு வேகவேகமாக கீழே செல்கிறாள். அங்கே அனைவரும் தயாராக நின்று கொண்டு இருக்க, நந்தினி "நாங்கள் தயராக கொஞ்ச நேரமாகும் அதனால் சக்தியுடன் வருகிறோம் நீங்க கிளம்புங்க" என சொல்லி ஏதோ பிளான் போடுகிறாள்.


அப்போது குணசேகரனின் எடுபுடி ஜான்சி ராணி முந்திரிக்கொட்டை போல வந்து "மண்டையில இரண்டு தட்டு தட்டி நான் கூட்டிட்டு வரேன். நீங்க கிளம்புங்க அண்ணன்" என்கிறாள். "நாங்க ஏறுற கார்ல நீ கால் எடுத்து வச்சன்னு வை காலை ஒடச்சுப்புடுவேன்" என  ஜான்சியை மிரட்டுகிறான் சக்தி. அதைப் பார்த்த அப்பத்தாவுக்கும்  மற்ற பெண்களுக்கும் சந்தோஷமாக இருக்கிறது. 


குணசேகரனுடன் கோயிலுக்குச் சென்ற ஜான்சி வத்தி வைக்கிறாள். "உங்க பொண்டாட்டி ஏதோ ஒரு பிள்ளையை தூக்கிட்டு குடுகுடுன்னு உள்ளாரா ஓடி வந்தா...எதையோ ஒன்ன ஒளிச்சு வச்சு இருக்காளுங்க அண்ணன்" என ஜான்சி சொல்லவும், கதிர், ஞானம் மற்றும் குணசேகரனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இவர்கள் பேசுவதை பெண் ஒருவர் வீடியோ எடுக்கிறார். அநேகமாக அவர் ஜீவானந்தத்தின் ஆளாக இருக்கக்கூடும்.  


 



ஈஸ்வரியும் ஜனனியும் வெண்பாவை காரிலேயே இருக்க வைக்கலாம் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஈஸ்வரியும் காரிலேயே வெண்பாவுடன் இருக்கிறேன் என சொல்வதால் சக்தியும் ஜனனியும் மட்டும் கோயிலுக்குள் செல்கிறார்கள். உள்ளே அவர்கள் வரவில்லை என்பதால் "எங்களுக்கு மரியாதை என்றாலே உங்களுக்கு பிரச்சினை தானே. பூசாரி நீ பூசையை ஆரம்பி" என சொல்ல, கதிர் ஈஸ்வரியை தேடி வெளியில் செல்ல நந்தினியும் ரேணுகாவும் பதட்டமாக இருக்கிறார்கள். 


 



ஜீவானந்தம் கோயிலுக்கு வந்து இறங்குகிறார். ஈஸ்வரியுடன் வெண்பா இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பின்னர் ஈஸ்வரியை கடுமையாக ஏதோ சொல்ல ஈஸ்வரி கண்கலங்கி நிற்கிறாள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.