சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (மார்ச் 12) எபிசோடில் ரேணுகா நந்தினி மீண்டும் சேர்ந்து இருப்பதை பார்த்து பொறாமைப்படும் ஜான்சி ராணி தேவையில்லாமல் பேசி நந்தினியிடம்  வாங்கி கொள்கிறாள். இன்றே ஈஸ்வரி, தர்ஷினி இருவரும் வீட்டுக்கு வந்து விடுவார்கள் என நம்பிக்கையுடன் சொல்கிறாள் நந்தினி. ஞானம் கருவாடு தொழில் செய்வதற்காக அட்வான்ஸ் கொடுத்து விட்டு வந்தது பற்றி ரேணுகாவிடம் சொல்கிறான்.


 




மறுபக்கம் ஜீவானந்தம், தர்ஷினியை கோர்ட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக அவளுக்கு தைரியம் சொல்லி மெதுவாக அழைத்துச் செல்கிறார். தர்ஷினிக்கு மனதளவில் பாதித்ததில் இருந்து எதைப் பார்த்தாலும் பயப்படுகிறாள். அதே பகுதியில் வீர சங்கிலியின் அடியாள் தர்ஷினியையும் ஜீவானந்தத்தையும் கொலை செய்வதற்காக அவர்கள் இருவரையும் தேடி வருகிறான். போலீஸ் மறுபக்கம் ஜீவானந்தத்தை சுட்டுத்தள்ளி தர்ஷினியைக் காப்பாற்ற தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.

தர்ஷினி அந்தக் காட்டுப்பகுதியில் குரங்கின் சத்தத்தை கேட்டு பயந்து போகிறாள். அவள் போட்ட சத்தத்தை கேட்டு வீர சங்கிலியின் அடியாள் ஜீவானந்தத்தையும் தர்ஷினியையும் பார்த்து விடுகிறான். அவனுடன் இருந்த ஒரு ரவுடியை வைத்து ஜீவானந்தத்தை வெறுப்பேற்றி தர்ஷினியை விட்டு நகர வைக்கிறான். மறுபக்கம் தர்ஷினியை சுட முயற்சிக்கிறான். தர்ஷினியின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஜீவானந்தம் ஓடி வர அந்த ரௌடி ஜீவானந்தத்தை கத்தியால் குத்தி விடுகிறான். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.


 




தர்ஷினி அலறல் சத்தத்தைக் கேட்டு அந்த இடத்துக்கு போலீஸ் விரைந்து வர வீர சங்கிலியின் அடியாள் ஓடி விடுகிறான். மயக்கம் போட்டு விழுந்து தர்ஷினியை, ஸ்பெஷல் ஆபீசர் கொன்றவை அவரின் டீம் உதவியுடன் ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கிறார்கள்.


 




குணசேகரனுக்கு தர்ஷினி கிடைத்த தகவல் தெரிவிக்கப்படுகிறது. அவர் ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டது பற்றி தெரிந்து அதிர்ச்சி அடைகிறார். வீட்டில் உள்ள மற்றவர்களும் அதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறார்கள். ஹாஸ்பிடலுக்கு விரைந்து சென்ற குணசேகரன், ஸ்பெஷல் ஆபீசரிடம் என்னோட மகளை இந்த நிலைக்கு ஆளாக்கினவனை சுட்டுத் தள்ளி விட்டீர்களா, இல்லையா எனக் கேட்க கொன்றவை ஜீவானந்தம் தப்பித்து விட்டது பற்றி சொல்கிறார். அதைக் கேட்டு குணசேகரன் அதிர்ச்சி அடைகிறார். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.