சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் தர்ஷினியை காணவில்லை என ஈஸ்வரி, ஜனனியுடன் மற்றவர்களும் கோயிலில் தகவலுக்காக மிகவும் வருத்தத்துடன் காத்திருக்கிறார்கள். விசாலாட்சி அம்மா கதிரைத் திட்ட, தாரா தன்னுடைய அப்பாவுக்கு ஆதரவாகப் பேசி உள்ளே அழைத்துச் சென்று நன்றாக கவனித்து கொள்கிறாள்.
மகள் தன்னை பாசத்துடன் பார்த்துக் கொள்வதை பார்த்து மனம் குளிர்ந்த போன கதிர், நந்தினிக்கு போன் செய்து தர்ஷினியை எப்படியாவது தேடி கண்டுபிடித்து அழைத்து வருமாறு சொல்கிறான். மனம் திருந்தி பேசிய கதிரை நினைத்து நந்தினி சந்தோஷப்படுகிறாள்.
ஒரு பெண்ணின் சடலம் கிடைத்து இருப்பதால் இன்ஸ்பெக்டர் அங்கு சென்று பார்த்து அது ஒரு வேலை அது தர்ஷினியாக இருக்குமோ என ஜனனிக்கு போன் செய்து இந்த தகவலை சொல்ல ஜனனி அதிர்ச்சி அடைகிறாள். இந்த விஷயத்தை ஜனனி ஈஸ்வரியிடம் சொல்வாளா இல்லையா? அது உண்மையிலேயே தர்ஷினியா? இல்லை தர்ஷினி தன்னுடைய தற்காப்பு கலையை பயன்படுத்தி கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பித்து விட்டாளா? இப்படி பல பரபரப்பான நிகழ்வுகளுடன் சஸ்பென்சாக ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் (Ethirneechal) தொடர்.