சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் குணசேகரன் பேசிய பேச்சை கேட்டு  "இனி இந்த வீட்டில் நாம சாப்பிட கூடாது. வாங்க நாம போய் ஹோட்டலில் சாப்பிடலாம்" என ஞானம், கதிர் மற்றும் தர்ஷனை அழைத்து கொண்டு ஹோட்டலுக்கு செல்கிறாள் தாரா. அங்கே சென்று அனைவரும் சந்தோஷமாக சாப்பிடுகிறார்கள்.




அங்கே சாப்பிட்டதற்கு பணம் கொடுக்க அவர்களிடம் பணம் இல்லை என வருத்தப்படுகிறார்கள். அப்போது ஐஸ்வர்யா "அம்மாவின் டெபிட் கார்டு இருக்கிறது அதை வைத்து நாம பணம் கட்டி விடலாம். இது அம்மா உழைச்சு சம்பாதிச்ச பணம். இது நம்முடைய பணம் இதை நாம தைரியமா செலவு செய்து கொள்ளலாம்" என சொல்கிறாள். அதை கேட்டு கதிரும், ஞானமும் கண்கலங்குகிறார்கள்.

கதிர் நந்தினிக்கு போன் செய்து பார்க்கிறான். லைன் போகவில்லை என சக்திக்கு போன் செய்து பார்க்கிறான். ஆதிரை போனை எடுத்து சக்திக்கு அடிபட்டு ஹாஸ்பிடலில் இருப்பது பற்றி சொல்கிறாள். பதறி போய் அவர்களும் உடனே ஹாஸ்பிடலுக்கு வந்து விட்டார்கள். சக்திக்கு நடந்தது பற்றி ஆதிரை சொல்கிறாள்.


 




"எல்லோரும் தர்ஷினியை தேடி போய் இருக்காங்க. அவங்களை விடுங்க அவங்க தைரியமா தர்ஷினியை தேடி கண்டுபிடிச்சு கூட்டிட்டு வருவாங்க" என சக்தி சொல்கிறான்.  கதிர் ஆதிரையிடம் மன்னிப்பு கேட்டு அன்பாக பேசுகிறான். இப்போது தான் எனக்கு புத்தி வந்து இருக்கு என அழுது மன்னிப்பு கேட்கிறான் கதிர்.


தர்ஷினியை தேடி செல்லும் போது குணசேகரன் கொடுத்த புகாரின் பேரில் ஜீவானந்தத்தை கைது செய்வதற்காக போலீஸ் மப்டியில் வந்து இருக்கிறார்கள். அதை பார்த்து ஜீவானந்தம் பெண்கள் அனைவரையும் இறங்கு ஒளிந்து கொள்ள சொல்கிறார். நேராக சென்றால் தர்ஷியை காப்பாற்றிவிடலாம் என சொல்லிவிட்டு போலீசுடன் சென்றுவிடுகிறார். அத்துடன் முந்தைய எபிசோட் முடிவுக்கு வந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.


சக்தி கதிரை அழைத்து பேசுகிறான். "நான் எத்தனையோ தப்பு பண்ணி இருக்கேன். அதெல்லாம் எதுக்காக பண்ணேன். அந்த மனுஷனுக்காக தானே பண்ணேன்" என அழுகிறான் கதிர்.


 




தர்ஷினி ரவுடிகளிடம் இருந்து தப்பித்து விட்டாள். அந்த ரவுடிகள் அவளை எல்லா இடத்திலும் தேடுகிறார்கள். அதற்குள் ஜனனியும் மற்றவர்களும் தர்ஷினியை அடைத்து வைத்து இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விடுகிறார்கள். அவர்கள் அந்த இடத்தை நெருங்கும் போது தர்ஷினி ஏற்கனவே துண்டு பேப்பரில் எழுதி தூக்கி எறிந்த பேப்பரை பார்த்துவிடுகிறாள் நந்தினி. அதை எடுத்து படிக்கிறாள். "என்னை கொடுமை படுத்துறாங்க" என தர்ஷினி எழுதி வைத்திருப்பதை படித்த நந்தினி அழுகிறாள்.


 





"என்ன அக்கா கொடும படுத்துறாங்க அப்படினு எழுதிவைச்சு இருக்கா?" என சொல்லி புலம்புகிறாள். அதை கேட்ட மற்றவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள். மேலே அவர்கள் நால்வரும் ஏறி செல்வதை தர்ஷினி மறைந்திருந்து பார்த்து சந்தோஷ படுகிறாள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ப்ரோமோவாக வெளியாகியுள்ளது. 

தர்ஷினியை பத்திரமாக காப்பாத்தி கூட்டிட்டு போய் விடுவார்களா? ரவுடிகளிடம் ஜனனியும் மற்றவர்களும் சிக்கி கொள்வார்களா? மிகவும் பரபரப்பான கட்டத்தில் ஒளிபரப்பாகி வரும்  எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய எபிசோட் விறுவிறுப்பாக அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.