சன் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய எபிசோடில் (அக்டோபர் 13) என்ன நடந்தது என்பது பற்றி காணலாம்.


ஜனனியின் அப்பா நாச்சியப்பனிடம் தான் வாழ்க்கையில் நன்றாக வருவேன் என சவால் விடுகிறார். அப்படி செய்து விட்டால் நான் காலில் விழுகிறேன் என சொல்லி விட்டு அவர் வீட்டை விட்டு வெளியே செல்கிறார். நாச்சியப்பன் வீட்டில் இருந்து வருவதை காரில் வரும் ஞானம், கதிர், கரிகாலன் 3 பேரும்  பார்க்கின்றனர். வீட்டுக்குள் சென்று பெண்களிடம் எதுக்கு நாச்சியப்பன் வந்தான் என கேட்க, இதெல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது, சொல்ற தேவையும் இல்ல என கோபத்தில் பேசுகிறான். 


உடனே ஜனனிக்கு ஜால்ரா அடிப்பதாக கதிர் குத்திக்காட்ட, உன் கை, கால் முறியும்போது தெரியும் யார் வந்து பார்க்கப்போறான்னு என சக்தி டென்ஷனாக பேசுகிறார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் கரிகாலன் சக்தியிடம் சென்று, உனக்கு பேச எல்லாம் தெரியுமா? உன் மாமனார் வந்து ஸ்குரு கொடுத்துட்டாரா என நக்கலாக கேட்க, அவனுக்கு அடி விழுகிறது. என்கிட்ட உன் வீரத்தை காட்டு என கதிர் எகிற, சக்தி அவனிடம் சண்டைக்கு செல்கிறான். இதனை கண்டு நொந்துபோகும் விசாலாட்சி கதிரை அழைத்துக் கொண்டு உள்ளே போகுமாறு ஞானத்திடம் சொல்கிறார். 


தொடர்ந்து வீட்டுக்குள் சென்ற கதிர் மற்றும் ஞானத்திடம் குணசேகரனை போலீசில் இருந்து கூட்டி வராதது பற்றி விசாலாட்சி தெரிவிக்கிறார். அண்ணன் எல்லா தப்பையும் ஒத்துக்கிட்டாரு. ஒரு வாரம் ஜெயில்ல தான் இருக்கணும் என சொல்லிட்டாங்க, வந்துருவாரு என இருவரும் விசாலாட்சியிடம் தெரிவிக்கிறார்கள். நடுவே ஜான்சிராணி வந்து குணசேகரனை பற்றி விசாரித்து கொள்கிறாள். வீட்டின் மருமகள் எல்லோரும் வெளியே வாசலில் இருக்கிறார்கள்.  அப்போது குழந்தைகளை படிக்க உள்ளே போகுமாறு நந்தினி சொல்ல, தாரா பசிப்பதாக கூறுகிறாள். 


சாப்பாடு கொடுக்க சமையலறை பக்கம் சென்ற அனைவரையும் விசாலாட்சி அழைத்து இனிமேல் அங்கே உங்களுக்கு வேலை என கூறி, சமையல் பொறுப்பை ஜான்சி ராணியிடம் கொடுக்கிறார். பின்னர் கதிர், ஞானம், விசாலாட்சிக்கு நல்லா கறி விருந்து வைக்கிறாள் ஜான்சி ராணி. வீட்டில் மற்றவர்கள் அவளின் சாப்பாட்டை உண்ண மறுக்கிறார்கள். இப்படியான நிலையில் வெளியே சென்றிருந்த அப்பத்தா வீட்டுக்கு வருகிறார். வந்ததும் அவரிடம் ஜான்சி ராணி நடந்த விஷயத்தை சொல்லி, சமையலறை இனிமேல் எங்க கண்ட்ரோல் என சொல்கிறார். 


மாடியில் அனைவரும் அமர்ந்திருக்க அங்கு செல்லும் அப்பத்தாவிடம் நீங்க அட்வைஸ் பண்ணிட்டு போய்டுவீங்க, எங்களால நிம்மதியா இருக்க முடியல என நந்தினி புலம்புகிறாள். அவர்களிடம் “தெளிவா நீங்க எல்லாரும் எல்லாத்தையும் இத்தோட முடிச்சுக்குங்க என சொல்லிட்டு போறதுக்காக வந்தேன்"  ஆறுதல் சொல்லும் காட்சிகளோடு இன்றைய எபிசோடு நிறைவடைந்தது. 




மேலும் படிக்க: Leo New Stills: இதுதான் லியோ தாஸின் அழகான குடும்பம்.. அசரடிக்கும் விஜய், க்யூட் த்ரிஷா.. புது ஸ்டில்கள் வெளியீடு!