'சிறகடிக்க ஆசை' (Siragadikka Aasai ) சீரியல் இன்றைய எபிசோடில் “ரோகிணிக்கு தாலி செயின் வாங்கித் தர வேண்டும். மனோஜ் வாங்கித் தர வரைக்கும் அவ இப்படி இருக்க முடியுமா? நம்ம குடும்ப கௌரவம் என்ன ஆகும்?” என அண்ணாமலையிடம் சண்டை போடுகிறாள் விஜயா. "இத்தனை நாளா மீனா மஞ்சக்கயிறோடு தான் இருக்குறா. அப்போ உன்னோட கௌரவம் போகலையா? எல்லா மருமகளையும் ஒரே மாதிரி பார்க்க கத்துக்கோ" என அண்ணாமலை விஜயாவுக்கு அட்வைஸ் செய்கிறார்.
விஜயா ரோகிணியிடம் சென்று "இப்படி மஞ்சள் கயிறுடன் இருப்பதைப் பார்த்தா கஷ்டமாக இருக்கு. முத்துவும் மீனாவும் ஆசைப்பட்டது போலவே நடந்துடுச்சு. கீழ் வீட்டில அட்வான்ஸ் பணம் வாங்கி செயினை மீட்டலாம் வா" என சொல்கிறாள் விஜயா. "வேண்டாம் ஆண்ட்டி பணம் சம்பாதிச்சு வாங்கிக்கலாம்" என ரோகிணி சொல்ல "பரம்பரை பணக்காரங்க இப்படி தான் கௌரவமா இருப்பாங்க. சில பேர் இந்த வீட்ல இருந்து என்ன எடுத்துக்கிட்டு போகலாம் என தான் பாப்பாங்க" என விஜயா சொல்லிக்கொண்டு இருக்க அதை கேட்ட ஸ்ருதி மீனாவுக்கு சப்போர்ட் செய்து விஜயாவிடம் சண்டை போடுகிறாள்.
“ரோகிணி செயினை அடமானம் வைச்சதுக்கு மீனா எப்படி காரணமா இருப்பாங்க. முத்து அப்படி பண்ணதுக்கு மீனா என்ன செய்வாங்க. அம்மா தான் பணத்தை திருப்பி தர வேண்டாம் என சொல்லி இருக்காங்க" என ஸ்ருதி சொல்கிறாள். "பொருளையும் வாங்கிகிட்டு பணத்தையும் கொடுக்கலைன்னா நல்லா இருக்காது. நாங்க நியாயமா தொழில் செய்யணும் என ஆசைப்படுகிறோம். மனோஜ் எனக்கு வாங்கிக் கொடுப்பார் என எனக்கு நம்பிக்கை இருக்கு" என ரோகிணி சொல்லிவிட்டு கிளம்புகிறாள். ரோகிணி அவளுடைய ப்ரெண்டிடம் நடந்ததைப் பற்றி சொல்கிறாள். “நான் இப்படி மஞ்சள் கயிறோடு கொஞ்ச நாட்களுக்கு இருப்பது தான் நல்லது. மனோஜுக்கு இப்ப என் மேல மரியாதை அதிகமாயிடுச்சு. இனிமே என்னை விட்டு கொடுக்காம இருப்பான். குடும்பத்துல இருப்பவர்களும் என் அப்பா பத்தி கொடையாம இருப்பாங்க" என்கிறாள் ரோகிணி.