Siragadikka aasai September 9 : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய (செப்டம்பர் 9) எபிசோடில் விஜயா பார்வதி வீட்டுக்கு செல்வதால் மீனாவை மதியம் சாப்பாடு எடுத்து வர சொல்லி சொல்கிறாள். அப்போது அங்கே வந்த முத்து "மீனாவுக்கு வேலை இருக்கிறது அதனால அவளால கொண்டு வர முடியாது. வேணும்னா உங்களுக்கு இரெண்டு மருமகள் இருக்காங்க இல்ல. அவங்கள கொண்டு வந்து கொடுக்க சொல்லுங்க" என்கிறான். உடனே விஜயாவுக்கும் முத்துவுக்கும் இடையில் வாக்குவாதம்  வர அண்ணாமலை வந்து என்ன நடந்தது என விசாரிக்கிறார். நடந்ததை சொன்னதும் "சரி நான் வீட்ல சும்மா தானே இருக்கேன் நான் எடுத்து வந்து கொடுக்குறேன்" என சொல்ல "வேணாம் மாமா நானே எடுத்துட்டு போறேன்" என மீனா சொல்லி பிரச்சினை  முடிக்கிறாள். 


 




மனோஜை தேடி ஷோரூமுக்கு வந்த ஒருவன் மொட்டை கடுதாசி ஒன்றை கொண்டு வந்து கொடுத்துவிட்டு மறைந்து போகிறான். அந்த லெட்டரில் "இனி உன் வாழ்க்கையில் நடக்க போகும் சம்பவத்தால் உன்னுடைய அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வர போகுது, உன்னோட தம்பி கொலை செய்ய போகிறான், நீ தற்கொலை செய்து கொள்ள போகிறாய்" என எழுதி இருந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மனோஜ் அவனை தேடி ரோட்டில் அலைகிறான். டீ கடையில் அவனை கண்டுபிடித்து நீ யாரு என விசாரிக்க ஏமாற்றிவிட்டு அங்கிருந்து எஸ்கேப்பாகி விடுகிறான் அந்த நபர். அருகில் இருந்தவர்கள் "அவன் ஒரு பிக் பாக்கெட். அடிக்கடி ஜெயிலுக்கு போயிட்டு வருவான். ஷோ ரூம் எல்லாம் வைச்சு இருக்க என சொல்ற பத்திரமா இருங்க" என அட்வைஸ் செய்கிறார்கள். மனோஜ் குழப்பத்திலேயே போகிறான். 


 




அண்ணாமலை மற்றும் ஸ்ருதிக்கு சாப்பாடு பரிமாறுகிறாள் மீனா. விஜயாவை புரிஞ்சுக்கவே முடியல என பேசி கொள்கிறார்கள். அப்போது அண்ணாமலை விஜயா வீட்டுக்கு வந்தது போல பிராங்க் செய்ய ஸ்ருதியும் மீனாவும் சண்டை போடுவது போல ஆக்டிங் செய்கிறார்கள். அண்ணாமலை அதை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கிறார். மீனா விஜயாவுக்கு சாப்பாடு எடுத்து கொண்டு செல்கிறாள். 


வழியில் ஒரு வயசான தாத்தாவும் பாட்டியும் பசி மயக்கத்தில் இருக்கிறார்கள். விஜயாவுக்காக கொண்டு வந்த சாப்பாடை மீனா அவர்கள் இருவருக்கும் கொடுக்கிறாள். அவர்களும் வயிறார சாப்பிட்டு விட்டு மீனாவுக்கு மனதார நன்றி சொல்கிறார்கள். அவர்களுக்கு தினமும் சாப்பாடு எடுத்து வந்து கொடுக்கிறேன் என சொல்லி கொஞ்சம் பணமும் கொடுக்கிறாள். அதற்குள் இன்னும் சாப்பாடு எடுத்து வரவில்லையே என விஜயா மீனாவுக்கு போன் செய்து விடுகிறாள். மீனாவும் சமாளிப்பதற்காக  இதோ வந்து கொண்டிருக்கிறேன் என சொல்லிவிடுகிறாள். 


விஜயா டான்ஸ் கிளாசில் சொல்லி கொடுத்து கொண்டு இருக்கிறாள். அங்கே இருக்கும் காதல் ஜோடி ஒருவரை ஓருவர் ஜாடையாக பார்த்து பேசி சிரித்து கொள்கிறார்கள். இதை பார்த்த பார்வதிக்கு சந்தேகமாக இருக்கிறது. அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.