Siragadikka Aasai serial August 26 : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய (ஆகஸ்ட் 26 ) எபிசோடில் ரோகிணியும் மனோஜும் நல்லா சேல்ஸ் ஆகி இருக்கு என சொல்லி ஸ்வீட் கொண்டு வந்து விஜயாவுக்கு கொடுக்கிறான். ஆனால் விஜயாவோ ரோகிணி ஏதோ நல்ல விஷயம் சொல்ல போகிறாள் என நினைத்து ஏமாந்து விடுகிறாள் விஜயா. ரோகிணி பற்றி ஹாஸ்பிடலில் சொன்னதை நினைத்து மீனா குழப்பத்தில் இருக்கு விஜயா டீ கேட்டதை கூட மறந்து காபி போட்டு எடுத்து வந்து கொடுக்கிறாள். அதை குடித்து பார்த்த விஜயா மீனாவை திட்டி தீர்க்கிறாள். ஆனால் மீனாவின் ஓட்டம் எல்லாம் ரோகிணியை பற்றியே இருக்கிறது.


 




அப்போது ரவியும் ஸ்ருதியும் வீட்டுக்கு சந்தோஷமாக வந்து முத்து தான் இன்னைக்கு சோசியல் மீடியாவில் வைரல் ஆகிட்டு இருக்காரு என சொல்ல யாருக்கும் ஒன்னும் புரியவில்லை. அதற்குள் முத்து மாலையும் கழுத்துமாக வீட்டுக்கு வருகிறான். 


"முத்து : பிரசவத்துக்காக ஒரு பொண்ணை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனேன். போற வழியிலேயே அந்த பொண்ணுக்கு பிரசவ வலி அதிகமாயிடுச்சு. அந்த பொண்ணுக்கு காரிலேயே பிரசவம் நடந்துடுச்சு. அழகான பெண் குழந்தை. என்னோட கையில தான் கொடுத்தாங்க. அந்த குழந்தையோட முகம், பால் வாடை பார்த்து என்னோட கண்ணு கலங்கிருச்சு" என உணர்ச்சிவசப்பட்டு சொல்கிறான். 


அண்ணாமலை, ரவி, ஸ்ருதி என அனைவரும் முத்துவை பாராட்ட வழக்கம் போல மனோஜ் அபசகுனமாக பேசுகிறான். 


"விஜயா : ஊர்ல, கார்ல எல்லாம் விசேஷம் நடக்குது ஆனா நம்ம வீட்ல தான் எதுவுமே நடக்க மாட்டேங்குது" என புலம்புகிறாள். அண்ணாமலை விஜயாவை சமாதானம் செய்கிறார். 


விஜயா ரோகிணியை பார்த்து "இந்த வீட்டோட மூத்த மருமகள் நீ தான். நீ தான் முதலில் குழந்தையை பெத்துக்கணும்" என சொல்ல பதட்டத்தில் மீனா பாத்திரத்தை கீழே போட்டுவிடுகிறாள். அனவைரும் அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். 


"மனோஜ் : அம்மா சொல்றது சரி தான். நான் தான் இந்த வீட்டோட மூத்த பையன் எனக்கு தான் முதலில் குழந்தை பிறக்கணும்


முத்து : அவனே முதல பெத்துக்கட்டும். எங்களுக்கு முதல குழந்தை பிறக்கணும் என எல்லாம் ஆசை இல்லை. முதல நாங்க ரூம் கட்டணும்" என சொல்ல 


 



"விஜயா : அப்போ ஐம்பது வயசுல தான் குழந்தை பெத்துக்கணும்" என நக்கலாக சொல்ல "பரவலா அதனால என்ன" என முத்து சொல்லவிட்டு செல்கிறான். 


மீனா டல்லாக இருப்பதை பார்த்த ஸ்ருதி கிச்சனுக்கு சென்று என்ன விஷயம் என விசாரிக்கிறாள். எதுவும் இல்லை என மீனா சொன்னாலும் ஸ்ருதி நம்பாமல் "முத்து உங்ககிட்ட பிரச்சினை பண்ணறா? நான் போய் கேக்குறேன்" என சொல்லி கோபமாக கிளம்ப அவளை தடுத்து நிறுத்திய மீனா "அதெல்லாம் வேணாம். நான் இன்னிக்கு சீதா வேலை பாக்குற ஹாஸ்பிடல் போய் இருந்தேன்" என சொல்லி என்ன நடந்தது என்பதை சொல்ல வருகிறாள். அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.