Siragadikka Aasai Serial August 22 : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' சீரியலின் இன்றைய எபிசோடில் மீனாவின் அம்மா முத்துவிடம் மன்னிப்பு கேட்பதற்காக வந்து இருக்கிறார்கள். அவர்களிடம் சரியாக பேசாமல் சவாரி வந்து இருக்கு என சொல்லி அங்கிருந்து கிளம்பி விடுகிறான் முத்து. மீனாவின் அம்மாவிடம் செல்வம் பேசி சமாதானம் செய்து வைக்கிறான். "அவனோட பேச்சை கேக்காம போனதால தான் முத்துவுக்கு கோபம். அது சரியாகிடும். நீங்க கவலைப்படாம வீட்டுக்கு போங்க அம்மா" என சமாதானம் செய்து அனுப்பி வைக்கிறான் முத்து. 


 




ரோகிணி ஷோரூமுக்கு இரு பெண்கள் வருகிறார்கள். அவர்கள் பொருள் வாங்க வந்து இருப்பதாக நினைத்து இதை காட்டவா அதை காட்டவா என ரோகிணி கேட்க அவர்கள் நாங்கள் பொருள் வாங்க வரவில்லை, பாம்ப்லேட் கொடுக்க வந்து இருக்கோம் என சொல்லி பக்கத்தில் புதிதாக திறந்து இருக்கும் ஸ்கூல் பற்றி விளம்பரம் செய்கிறார்கள். அதை பார்த்து சந்தோஷமான ரோகிணி க்ரிஷை அந்த பள்ளியில் சேர்ப்பதற்காக டீடைல்ஸ் கேட்கிறாள்.


 



அப்போது அங்கு வந்த மனோஜ் என்ன என விசாரித்து "ஸ்கூலுக்கு அனுப்பணும்னா அதுக்கு எங்களுக்கு முதல குழந்தை இருக்கனும்ல" என்கிறான். வந்தவர்கள் ரோகிணியை ஆஹா ஓஹோ என பாராட்டுகிறார்கள். குழந்தை பிறக்கிறது முன்னாடியே இவ்வளவு விசாரிக்குறீங்க என சொல்கிறார்கள். குழந்தை எப்போ பிறக்கும் என ஜோசியரை போய் பார்க்கலாம் என மனோஜ் சொல்ல ரோகினி முதலில் கோவா போயிட்டு வரலாம் என சொல்கிறாள். 



மீனா தனக்கு தெரிந்தவர்களிடம் வீட்டில் நடந்த பிரச்சினை பற்றி சொல்கிறாள். அப்போது மீனாவின் அம்மா போன் பண்ணவும் அவரிடம் வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லை எல்லாம் சரியாயிடுச்சு என சமாளிக்கிறாள். ஆனால் மீனாவின் அம்மா முத்துவை போய் சந்தித்தது பற்றி சொல்கிறார். மீனாவுக்கு தெரிந்தவர்கள் முத்துவை வழிக்கு கொண்டு  வர ஐடியா கொடுக்கிறார்கள். முத்துவுக்கு பிடித்த மாதிரி சமைத்து கொடுக்க சொல்கிறார்கள்.


 



 


சவாரிக்கு சென்ற இடத்தில் முத்துவின் காரில் ஒரு பெண்மணி அழுதுகொண்டே ஏறுகிறார். கொஞ்சம் நேரம் பார்த்து இருந்த முத்து அந்த அம்மாவிடம் என்ன நடந்தது என விசாரிக்கிறான். முதலில் தயங்கிய அந்த அம்மா பின்னர் என்ன பிரச்சினை என்ன சொல்கிறார். அந்த அம்மாவுடைய அண்ணனுக்கும் கணவருக்கும் பிரச்சினை அதனால் அவரை பார்க்க கூடாது என சொல்லிவிட்டார். இப்போ அவருக்கு உடம்பு சரியில்லை. அவர் தான் என்னை வளர்த்தார். எத்தனை நாள் தான் பொறந்த வீட்டில் இருக்கவங்க கூட பேசாமல் இருப்பது. அது தான் அவரை பார்க்க கிளம்பிட்டேன் என அழுது கொண்டே சொல்கிறார். 



முத்து இதை பற்றி யோசித்து கவலை பட செல்வம் முத்துவுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்கிறான். "எந்த வீட்டில் தான் பிரச்சினை இல்லை. சத்யா பத்தின உண்மை அவங்களுக்கு தெரியாததால் தான் அவனை நம்புறாங்க. உனக்கும் சத்யாவுக்கும் இருக்குற பிரச்சினை வேற. அதை ஏன் நீ தங்கச்சிகிட்ட காட்டுற" என எடுத்து சொல்லி புரிய வைக்கிறான். இது தான் இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் கதைக்களம்.